விஜய் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் கார்கே, ராகுல் காந்தி! தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

கங்கனாவுடன் என்ன பிரச்னை? தாப்ஸி விளக்கம்!

கங்கனா ரணாவத் குறித்து தாப்ஸி பேசியுள்ளார்...

News image

தாப்ஸி , கங்கனா ரனாவத்

Updated On :22 பிப்ரவரி 2026, 12:57 pm IST

நடிகை தாப்ஸி, கங்கனா ரணாவத் குறித்து பேசியுள்ளார்.

நடிகை தாப்ஸி நடிப்பில் வெளியான ஆசிஸ் (asis) திரைப்படம் நல்ல விமர்சனங்களுடன் ரசிகர்களின் பாராட்டுகளைப் பெற்று வருகிறது.

தொடர்ந்து, தாப்ஸி கதையம்சமுள்ள படங்களைத் தேர்ந்தெடுத்து நடித்து வருவதால், அவரின் திரைப்படங்களுக்கென ரசிகர்களும் உள்ளனர்.

இதற்கிடையே, பாலிவுட்டின் முன்னணி நடிகைகளில் ஒருவரான தாப்ஸிக்கும் கங்கனா ரனாவத்துக்கும் இடையே ஏதோ சண்டை இருப்பதால்தான் இருவரும் பொது நிகழ்வுகளில் கலந்துகொள்ளும்போது கூட ஒருவரை ஒருவர் கண்டுகொள்ளாமல் இருக்கின்றனர் என தகவல்கள் வெளியாகின.

இந்த நிலையில், நேர்காணலில் பேசிய தாப்ஸியிடம், “உங்களுக்கும் கங்கனாவுக்கு இடையே என்ன பிரச்னை?” எனக் கேட்கப்பட்டது.

அதற்கு தாப்ஸி, “எனக்கும் அவருக்கும் எந்த சண்டையும் இல்லை. நாங்கள் சண்டையிட்டதை யார் பார்த்தார்கள்? நான் அவரை எங்கும் தவறாக பேசியதும் இல்லையே? அவர்களுக்கு அதுதான் சந்தோஷம் என்றால் நாங்கள் இருவரும் சண்டையிட்டுக் கொண்டதாகவே நினைத்துக்கொள்ளட்டும். உண்மையில், அவரின் சகோதரிதான் என்னைச் சீண்டினார்.” எனத் தெரிவித்துள்ளார்.

கங்கனாவின் சகோதரி ரங்கோலி சாண்டல் சில ஆண்டுகளுக்கு முன் தாப்ஸியை, ‘மலிவான நகல்’ (சீப் காபி) என சொன்னது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.