விஜய்யின் ஜன நாயகன் திரைப்படத்திற்கு ஆதரவாக சூர்யா, சிரஞ்சீவி உள்ளிட்டோர் பதிவிட்டுள்ளனர்.
நடிகர் விஜய் நடிப்பில் உருவான ஜன நாயகன் திரைப்படம் சென்சார் பிரச்னைகளால் பொங்கல் வெளியீட்டிலிருந்து ஒத்திவைக்கப்பட்டது. பின், மறுதணிக்கை செய்யப்பட்டு மே மாத வெளியீடாக வரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நேற்று (ஏப். 9) இரவு சமூக வலைதளங்களில் இப்படத்தின் முதல் 5 நிமிடக் காட்சி வெளியானது.
தொடர்ந்து, முழுப்படமும் இணையத்தில் கசிந்து திரைத்துறையினர் முதற்கொண்டு பலரையும்அதிர்ச்சியடையச் செய்தது. மேலும், இப்படத்தைப் பகிர்வோர்கள் உரிமையியல், குற்றவியல் நடவடிக்கைகளை எதிர்கொள்ள நேரிடும் என தயாரிப்பு நிறுவனம் எச்சரித்து வக்கீல் நோட்டீஸ் வெளியிட்டுள்ளது.
இந்த நிலையில், தெலுங்கின் சூப்பர்ஸ்டார் நடிகரான சிரஞ்சீவி, "ஜன நாயகன் கசிந்த விஷயம் எனக்குள் ஆழமான கவலையை ஏற்படுத்துகிறது. சினிமா என்பது நம்பிக்கை, உழைப்பு, பலரின் கூட்டு கனவுகளால் ஆனது. இந்த மாதிரியான நிகழ்வுகள் திரைத்துறையிலுள்ள நம் அனைவரையும் பாதிக்கிறது. மேலும், நம்முடைய படைப்புகளைப் பாதுகாப்பது எவ்வளவு கடினம் என்பதையும் நினைவுறுத்துகிறது. இந்த இழப்பிற்காகவும் குற்றவாளிகளைத் தண்டிக்கவும், நாம் அனைவரும் கேவிஎன் புரடக்ஷன்ஸ் நிறுவனத்துடன் நிற்க வேண்டும். சினிமாவை காப்போம்." எனப் பதிவிட்டுள்ளார்.
தமிழ் சினிமாவிலிருந்தும் நிறைய எதிர்ப்புக்குரல் வந்துள்ளது. முக்கியமாக, நடிகர் சூர்யா, “இது ஏற்றுக்கொள்ளத் தக்கது அல்ல. படக்குழுவின் கனவு இதனால் குறைந்திருக்கும். நான் அனைவரிடமும் தாழ்மையாகக் கேட்கிறேன். தயவு செய்து, இணையத்தில் கசிந்ததை யாரும் பார்க்கவும் பகிரவும் வேண்டாம். மேலும், அப்படம் குறித்து இங்கு உரையாடவும் வேண்டாம். அவர்களின் உழைப்பு மரியாதை கொடுங்கள். நான் என் நண்பர்களுக்காக உடன் நிற்பதுடன் இச்செயலைக் கண்டிக்கிறேன். இது மன்னிக்க முடியாதது” எனத் தெரிவித்துள்ளார்.
Summary
actors suriya, chiranjeevi supports jana nayagan movie
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
ஜன நாயகனில் மாண்புமிகு தமிழக முதல்வர் விஜய்?
ஜன நாயகன் லீக்! விஜய் சம்பளத்தை திருப்பிக் கொடுத்தாரா? நடிகை பாராட்டு

சட்டவிரோத வெளியீட்டால் ஜன நாயகனுக்கு ரூ. 70 கோடி இழப்பு?

ஜன நாயகன் லீக்: 9 பேர் ஜாமின் மனு தள்ளுபடி
விடியோக்கள்

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை


