விஜய் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் கார்கே, ராகுல் காந்தி! தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

மலையாளத்தில் அறிமுகமாகும் அனுராக் காஷ்யப்..! பிறந்த நாளில் வெளியான போஸ்டர்!

பிரபல பாலிவுட் இயக்குநர் மலையாளத்தில் நடித்துள்ள படத்தின் போஸ்டர் வெளியாகியுள்ளது.

News image

மலையாளத்தில் அறிமுகமாகும் அனுராக் காஷ்யப்.

Updated On :10 செப்டம்பர் 2024, 4:23 pm IST

ஹிந்தி சினிமாவில் பல்வேறு சோதனை முயற்சிகளை மேற்கொள்ளும் இயக்குநர்களில் ஒருவர் அனுராக் காஷ்யப். இவரது படங்கள் பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு விருதுகளைப் பெற்றுள்ளன.

அனுராக் இயக்கத்தில் வெளிவந்த ‘கேங்க்ஸ் ஆஃப் வாசிப்பூர்’, ‘ராமன் ராகவ்’, ’பிளாக் ஃப்ரைடே’ ஆகிய படங்கள் விமர்சகர்களால் பாராட்டுக்களைப் பெற்றன.

சன்னிலியோன் நடித்துள்ள கென்னடி படம் பல்வேறு திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டுள்ளது. விரைவில் இந்தப் படம் வெளியாகவிருக்கிறது.

நடிப்பில் அசத்தும் அனுராக் காஷ்யப்

தமிழில் ‘இமைக்கா நொடிகள்’ படத்தில் வில்லனாகவும் நடித்து அசத்தியிருந்தார். லியோவிலும் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

மகாராஜா படத்தில் கொடூரமான வில்லனாக நடித்து அசத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

தற்போது மலையாள படத்தில் நடித்துள்ளார். ஆஷிக் அபு இயக்கியுள்ள இந்தப் படத்தின் போஸ்டர் வெளியாகியுள்ளது.

ரைபிள் கிளப் எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் போஸ்டர் அனுராக் பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகியுள்ளது.

Story image

இந்தப் படம் விரைவில் திரைக்கு வருமென படக்குழு தெரிவித்துள்ளது. இந்தப் படத்தில் சமீபத்தில் பிரபலமான ராப் பாடகரும் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.