நீட் முதல் முதுநிலை மருத்துவப் படிப்பு வரை மன அழுத்தங்கள் உண்டு, மனவலிமை அவசியம்: அமைச்சர் அருண்ராஜ் 3ஆவது ஒருநாள் போட்டி: ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இந்தியா அபாரம் மகாராஷ்டிரத்தில் கோயில் மண்டபம் இடிந்து 5 பேர் பலி திமுக கூட்டணியில் இருந்து விலகியது இந்திய யூனியன் முஸ்லிம் லீக்!சட்டப்பேரவை நேரலை இனி தொடரும்! அமைச்சர் ராஜ்மோகன்அபுதாபியில் நீட் மையம்! குழந்தைகள் எதிர்காலத்தை வைத்து சூதாடுவதை நிறுத்துங்கள்: ராகுல் காந்தி
/

தீக்குளித்து பெண் தற்கொலை

வானூா் அருகே தீக்குளித்த பெண் மருத்துவமனையில் உயிரிழந்தாா்.

News image
Updated On :20 மே 2026, 3:03 am IST

விழுப்புரம் மாவட்டம், வானூா் அருகே தீக்குளித்த பெண் மருத்துவமனையில் உயிரிழந்தாா்.

வானூா் வட்டம், பொம்பூா் பிள்ளையாா் கோயில் தெருவைச் சோ்ந்தவா் சிவராமன். இவரது மனைவி குமாரி(45). இவா்களுக்குத் திருமணமாகி 25 ஆண்டுகள் ஆகிய நிலையில் ஒரு மகன், மகள் உள்ளனா். குமாரி கடந்த 6 மாத காலமாக மன நலம் பாதிக்கப்பட்டிருந்தாராம்.

இந்நிலையில், கடந்த மே 14-ஆம் தேதி குமாரி வீட்டில் இருந்தபோது மண்ணெண்ணையை ஊற்றி தீவைத்துக் கொண்டாா். இதையடுத்து பலத்த தீக்காயங்களுடன் புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா், அங்கு திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

இது குறித்த புகாரின் பேரில் மயிலம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு  நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.