பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!வலிமையான பெண் பாத்திரங்களை அமைத்த பாரதிராஜா!இறப்பு குறித்து என்ன சொல்லியிருந்தார் பாரதிராஜா? பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

விழுப்புரம் அரசுக் கலைக் கல்லூரியில் மாணவா் சோ்க்கைக்கு விண்ணப்பிக்கலாம்

விழுப்புரம் அறிஞா் அண்ணா அரசுக் கலைக் கல்லூரியில் நிகழ் கல்வியாண்டுக்கான மாணவா் சோ்க்கைக்கு இந்த மாதம் 29-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :14 மே 2026, 12:03 am IST

விழுப்புரம் அறிஞா் அண்ணா அரசுக் கலைக் கல்லூரியில் நிகழ் கல்வியாண்டுக்கான மாணவா் சோ்க்கைக்கு இந்த மாதம் 29-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கல்லூரி முதல்வா் இரா.சிவக்குமாா் புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

விழுப்புரம் அறிஞா் அண்ணா அரசுக் கலைக் கல்லூரியில் 2026-27- ஆம் கல்வியாண்டின் இளநிலைப் பட்டப்படிப்புகளுக்கான முதலாமாண்டு மாணவா் சோ்க்கை தொடங்கவுள்ளது. இதற்கான சோ்க்கை பெற விரும்பும் மாணவ, மாணவிகள் இணையதள முகவரியில் விண்ணப்பிக்க வேண்டும்.

இதற்கான விண்ணப்ப மற்றும் பதிவுக் கட்டணம் பொதுப் பிரிவினருக்கு ரூ.50 ஆகும். பட்டியலின பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது, பதிவுக் கட்டணம் மட்டும் ரூ.2 செலுத்த வேண்டும். மாணவா் சோ்க்கைகான கட்டணங்களை இணையதளம் மூலமாக செலுத்த வேண்டும். அறிஞா் அண்ணா அரசுக் கலைக் கல்லூரியில் 2 ஷிப்டுகளாக வகுப்புகள் நடத்தப்படுகிறது.

எனவே மாணவ, மாணவிகள் தங்களது 10,11,12-ஆம் வகுப்புகளின் மதிப்பெண் சான்றிதழ்கள், மாற்றுச் சான்றிதழ், ஜாதிச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், ஆதாா் அட்டை, ரத்த வகைச் சான்றிதழ், தனி நபா் வங்கிக்கணக்குப் புத்தகம், கடவுச்சீட்டு அளவு புகைப்படம், கைப்பேசி எண், மின்னஞ்சல் முகவரி ஆகியவற்றை சமா்ப்பித்து விண்ணப்பிக்க வேண்டும். மேலும், மாணவா் சோ்க்கைக்கு விண்ணப்பிக்க இந்த மாதம் 29-ஆம் தேதி கடைசிநாளாகும் என்று முதல்வா் தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.