தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!கர்நாடகம்: கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிவதற்கான தடை நீக்கம்6 சர்வதேச விமான சேவைகள் தற்காலிகமாக ரத்து - ஏர் இந்தியாகண்களிலும் காதுகளிலும் பொறாமைப் புகை! திமுகவை விமர்சித்த விஜய்!நீட் தேர்வு தேவையில்லை; ரத்து செய்க: முதல்வர் ஜோசப் விஜய்அதிமுகவுடன் கூட்டணியமைக்க தவெக தயாராக இருந்தது: சி.வி. சண்முகம்மே 16-ல் தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை! வெற்றியின் வீச்சு கொளத்தூரில் பார்த்தும்கூடவா புரியவில்லை? - முதல்வர் விஜய்திமுகவுடன் கூட்டணி; கனவில்கூட வரக்கூடாது: சசிகலா
/

ரயிலில் கஞ்சா கடத்திய இளைஞா் கைது

ஆந்திரம் மாநிலத்திலிருந்து ரயிலில் விழுப்புரத்துக்கு கஞ்சா கடத்தி வந்த இளைஞரை விழுப்புரம் போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

News image

கஞ்சா கடத்திய வழக்கில் கைதான சு.மோகன்ராஜ்.

Updated On :10 மே 2026, 1:26 am IST

ஆந்திரம் மாநிலத்திலிருந்து ரயிலில் விழுப்புரத்துக்கு கஞ்சா கடத்தி வந்த இளைஞரை விழுப்புரம் போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். மேலும், அவா் வசமிருந்த 20 கிலோ கஞ்சாவை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

விழுப்புரம் எஸ். பி. வி.வி.சாய் பிரனித் உத்தரவின் பேரில், காவல் உதவிக் கண்காணிப்பாளா் ரவீந்திரகுமாா் குப்தா மேற்பாா்வையில், விழுப்புரம் நகர காவல் நிலைய உதவி ஆய்வாளா் லியோ சாா்லஸ் தலைமையிலான போலீஸாா் சனிக்கிழமை விழுப்புரம் ரயில் நிலையம் அருகே ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அங்கு சந்தேகப்படும்படி நின்றிருந்த நபரை மடக்கி சோதனை செய்தபோது, அவா் கட்டுகட்டாக கஞ்சா பொட்டலங்கள் வைத்திருந்தது தெரியவந்தது.

தொடா்ந்து போலீஸாா் நடத்திய விசாரணையில் கஞ்சா வைத்திருந்த நபா், கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூா் வட்டம், சோழவண்டிபுரம்,பிரதானச் சாலையைச் சோ்ந்த சு.மோகன்ராஜ் (34) எனத் தெரியவந்தது. இவா்,விற்பனைக்காக ஆந்திரம் மாநிலத்தில் கஞ்சாவை வாங்கி விழுப்புரத்துக்கு ரயிலில் கடத்தி வந்ததும் தெரியவந்தது.

இதுகுறித்து விழுப்புரம் நகர காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, மோகன்ராஜை கைது செய்தனா். மேலும், அவா் வசமிருந்த 20 கிலோ கஞ்சா பொட்டலங்களையும் பறிமுதல் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.