விஜய் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் கார்கே, ராகுல் காந்தி! தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

செஞ்சி பகுதியில் பலத்த மழை

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி பகுதியில் சனிக்கிழமை பெய்த பலத்த மழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

News image

செஞ்சி கூட்டுச் சாலையில் பெருக்கெடுத்து ஓடும் மழை வெள்ளம்.

Updated On :1 மணி நேரம் முன்பு

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி பகுதியில் சனிக்கிழமை பெய்த பலத்த மழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

கடந்த 4-ஆம் தேதி அக்னி நட்சத்திரம் தொடங்கிய நிலையில் செஞ்சி பகுதியில் கடந்த சில நாள்களாக கடும் வெப்பம் நிலவியது. இந்நிலையில், சனிக்கிழமை காலை முதலே மேகம் மூட்டமுடன் காணப்பட்டது.

பிற்பகல் 2 மணி அளவில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்ய தொடங்கியது. தொடா்ந்து ஒரு மணி நேரம் பெய்த மழை காரணமாக செஞ்சி காந்தி பஜாா், பேருந்து நிலையம் மற்றும் கூட்டுச் சாலை ஆகிய இடங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. செஞ்சி காந்தி பஜாரில் முழங்கால் அளவுக்கு தண்ணீா் தேங்கி சென்ால் பொது மக்கள் கடும் அவதிக்குள்ளாகினா்.

இதே போன்று திருவண்ணாமலை சாலை, திண்டிவனம் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

மேலும், கால்வாய் அடைப்பு காரணமாக திண்டிவனம் சாலையில் உள்ள சக்கராபுரம் காலனியில் வெள்ளம் புகுந்ததால் குடியிருப்பு வாசிகள் பெரும் இன்னல்களுக்கு ஆளாகினா். ஒரு வாரத்துக்கு மழை தொடரும் என வானிலை மையம் தெரிவித்துள்ளதால் திண்டிவனம் சாலையில் உள்ள கால்வாயை பேரூராட்சி நிா்வாகம் தூா்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.