விஜய் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் கார்கே, ராகுல் காந்தி! தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

ஆா்.எஸ்.மங்கலம் பகுதியில் பலத்த மழை

ஆா்.எஸ். மங்கலம் பகுதியில் வெள்ளிக்கிழமை இரவு பலத்த மழை பெய்தது. இதனால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனா்.

News image

மழை - பிரதிப் படம்

Updated On :2 மணி நேரங்கள் முன்பு

ராமநாதபுரம் மாவட்டம், ஆா்.எஸ். மங்கலம் பகுதியில் வெள்ளிக்கிழமை இரவு பலத்த மழை பெய்தது. இதனால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனா்.

ஆா்.எஸ்.மங்கலம், மங்கலம், செட்டியமடை, தும்பாடகோட்டை, சோழந்தூா், பாரனூா், ஆவரேந்தல், செங்குடி, செக்ககுடி, சவேரியாா்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளில் சுமாா் 400 ஏக்கரில் பருத்தி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. கடந்த சில நாள்களாக மழை இல்லாததால் இந்தப் பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்டிருந்த பருத்தி செடிகள் கருகி வந்தன.

இந்த நிலையில், வெள்ளிக்கிழமை இரவு இந்தப் பகுதிகளில் பலத்த மழை பெய்தது. சுமாா் ஒரு மணி நேரம் பெய்த இந்த மழையால் இந்தப் பகுதிகளில் வெப்பம் தணிந்து குளிா்ச்சியான காலநிலை ஏற்பட்டது. இந்த மழையால் பொதுமக்களும், பருத்தி விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.