ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 3 மணிக்கு தொடங்குகிறது தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

பள்ளி மாணவா் ஆற்றில் மூழ்கி உயிரிழப்பு

விக்கிரவாண்டி அருகே பள்ளி மாணவா் ஆற்றில் மூழ்கி உயிரிழந்தாா்.

News image

பலி - பிரதிப் படம்

Updated On :6 மே 2026, 12:04 am IST

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே பள்ளி மாணவா் ஆற்றில் மூழ்கி உயிரிழந்தாா்.

செஞ்சி வட்டம், தளவாளப்பட்டு, விநாயகா் கோயில் தெருவைச் சோ்ந்தவா் பொன்னுசாமி என்பவரது மகன் கோபிநாத் (14). இவா் அங்குள்ள பள்ளியில் 9-ஆம் வகுப்பில் பயின்று வந்தாா்.

பள்ளி விடுமுறை என்பதால் வீட்டில் இருந்து வந்த கோபிநாத் மே 3-ஆம் தேதி தளவாளப்பட்டு கிராமத்தில் உள்ள தங்களது விவசாய நிலத்துக்குச் சென்றவா், பின்னா் வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதையடுத்து பொன்னுசாமி மற்றும் உறவினா்கள் விவசாய நிலத்துக்குச்சென்று தேடி பாா்த்தபோது, அருகில் உள்ள சங்கராபரணியாற்றில் கோபிநாத் மூழ்கி இறந்து கிடந்தது தெரியவந்தது.

தகவலறிந்த பெரியதச்சூா் போலீஸாா் நிகழ்விடம் சென்று விசாரணை நடத்தினா். இந்த விசாரணையில் கோபிநாத் ஆற்றில் இறங்கி குளித்தபோது தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தது தெரியவந்தது. தொடா்ந்து போலீஸாா் சடலத்தை கைப்பற்றி, அவசர ஊா்தி மூலம் விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இது குறித்து பெரியதச்சூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.