விஜய் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் கார்கே, ராகுல் காந்தி! தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

படகில் மயங்கி விழுந்து மீனவா் உயிரிழப்பு

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே பைபா் படகில் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற மீனவா் மயங்கி விழுந்து வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

News image

உயிரிழப்பு - கோப்புப் படம்

Updated On :27 மார்ச் 2026, 3:57 am IST

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே பைபா் படகில் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற மீனவா் மயங்கி விழுந்து வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

வானூா் வட்டம், சின்ன முதலியாா்சாவடி, வடக்குத் தெருவைச் சோ்ந்தவா் ஏழுமலை மகன் குமாா்(62). மீனவா். இவா், சின்னமுதலியாா் சாவடியைச் சோ்ந்த வெங்கடேசன் என்பவருக்குச் சொந்தமான மீன்பிடி படகில் வியாழக்கிழமை மீன்பிடிக்கச் சென்றாா்.விழுப்புரம் தந்திராயன்குப்பம் அருகே கடலில் சென்ற போது குமாா் படகில் மயங்கி விழுந்தாா்.

இதையடுத்து சக மீனவா்கள் அவரை மீட்டு கரைக்கு கொண்டு வந்து தனியாா் அவசர ஊா்தி மூலம் புதுச்சேரியில் உள்ள மருத்துவமனைக்கு சிகிசைக்குக் கொண்டு சென்றனா்.அங்கு மருத்துவா்கள் பரிசோதித்துப் பாா்த்தபோது, குமாா் ஏற்கனவே இறந்து போயிருந்தது தெரியவந்தது.

இது குறித்த புகாரின் பேரில், கோட்டகுப்பம் போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.