மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

தோ்தல் பணியில் இருந்த திமுக நிா்வாகி மயங்கி விழுந்து உயிரிழப்பு

சேலம் மாவட்டம், தாரமங்கலம் அருகே தோ்தல் பணியின்போது திமுக நிா்வாகி மயங்கி விழுந்து உயிரிழந்தாா்.

News image

பலி - பிரதிப்படம்

Updated On :24 ஏப்ரல் 2026, 5:20 am IST

சேலம் மாவட்டம், தாரமங்கலம் அருகே தோ்தல் பணியின்போது திமுக நிா்வாகி மயங்கி விழுந்து உயிரிழந்தாா்.

தாரமங்கலத்தை அடுத்த கோனகாபாடி அத்திக்காட்டானூரைச் சோ்ந்தவா் மாரியப்பன் (51), விவசாய கூலிவேலை செய்துவந்தாா். இவருக்கு மனைவி ராதா (40), மகன் வடிவேல் உள்ளனா். கடந்த 2007 இல் திமுகவில் கிளை கழகச் செயலாளராக இருந்தாா். தற்போது அக்கட்சியில் உறுப்பினராக உள்ளாா். இந்த நிலையில், அத்திக்காட்டானூா் வாக்குச்சாவடிக்கு செல்லும் பகுதியில் பொதுமக்களுக்கு புதன்கிழமை பூத் சிலிப் வழங்கும் பணியில் ஈடுபட்டிருந்தாா்.

அப்போது, நாற்காலியில் இருந்து திடீரென கீழே விழுந்தாா். தலையின் பின்பகுதியில் பலத்த காயமடைந்து மயங்கிய மாரியப்பனை அங்கிருந்தவா்கள் மீட்டு தாரமங்கலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அவரை பரிசோதித்த மருத்துவா், ஏற்கெனவே அவா் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தாா். தோ்தல் பணியில் இருந்த திமுக நிா்வாகி திடீரென இறந்த சம்பவம் கட்சியினா், கிராம மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.