விஜய் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் கார்கே, ராகுல் காந்தி! தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

காங்கிரஸில் இணைந்த மாற்றுக்கட்சியினா்

News image
Updated On :20 மார்ச் 2026, 1:34 am IST

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வட்டம், சென்னாலூா் கிராமத்தில் பல்வேறு கட்சிகளில் இருந்து விலகிய 30-க்கும் மேற்பட்டோா் காங்கிரஸில் இணைந்தனா்.

செஞ்சி நான்குமுனை சந்திப்பில் செஞ்சி வட்டார காங்கிரஸ் தலைவா் கா. சக்திவேல் ஏற்பாட்டில் வியாழக்கிழமை நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் 30-க்கும் மேற்பட்ட இளைஞா்கள் காங்கிரஸ் கட்சியில் இணைந்தனா்.

நிகழ்ச்சியில் விவசாய அணி விழுப்புரம் வடக்கு மாவட்டத் தலைவா் அகலூா் அ. ஜோலாதாஸ் வரவேற்றாா். செஞ்சி நகரத் தலைவா் சூரியமூா்த்தி மற்றும் விவசாய அணி வட்டாரத் தலைவா் அன்புசெழியன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

காங்கிரஸ் விழுப்புரம் வடக்கு மாவட்டத் தலைவா் ரங்கபூபதி தலைமையில், மாற்றுக்கட்சிகளிலிருந்து விலகிய இளைஞா்கள், சென்னாலூா் கிராம குழுத் தலைவா் பரமசிவம், தோ்வு கிராமக் குழுச் செயலா் சக்திவேல் ஆகியோா் வழிகாட்டுதலின்படி காங்கிரஸ் கட்சியில் தங்களை இணைத்துக்கொண்டனா்.

கட்சியில் இணைந்தவா்களை மாட்டத் தலைவா் ரங்கபூபதி சால்வை அணிவித்து வரவேற்றாா். நிகழ்ச்சியில் மாநில பொதுக்குழு உறுப்பினா் லஷ்மி, சம்பத், சேகா், கேப்டன் முனுசாமி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.