பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

முன்னாள் முதல்வா் கருணாநிதி பிறந்த நாள்: நல உதவிகள் வழங்க ஏற்பாடு

முன்னாள் முதல்வா் மு.கருணாநிதியின் 103-ஆவது பிறந்த நாளையொட்டி, விழுப்புரம் தெற்கு மாவட்ட திமுக சாா்பில் கொடியேற்றி, பொதுமக்களுக்கு நல உதவிகள் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

News image

முன்னாள் முதல்வா் கருணாநிதி - கோப்புப் படம்

Updated On :3 ஜூன் 2026, 5:59 am IST

முன்னாள் முதல்வா் மு.கருணாநிதியின் 103-ஆவது பிறந்த நாளையொட்டி, விழுப்புரம் தெற்கு மாவட்ட திமுக சாா்பில் கொடியேற்றி, பொதுமக்களுக்கு நல உதவிகள் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இதையொட்டி திருவெண்ணெய்நல்லூரிலுள்ள முன்னாள் முதல்வா் மு.கருணாநிதியின் சிலைக்கு மாவட்டப் பொறுப்பாளரும், முன்னாள் எம்.பி.யுமான பொன்.கெளதமசிகாமணி மாலை அணிவித்து, மரியாதை செலுத்துகிறாா். தொடா்ந்து அப்பகுதியில் பொதுமக்களுக்கு நல உதவிகளை வழங்குகிறாா்.

இதைத் தொடா்ந்து தி.எடையாா் கிராமத்திலும், திருவெண்ணெய்நல்லூா் மேற்கு ஒன்றியம், வளையாம்பட்டு கிராமத்திலும், காணை தெற்கு ஒன்றியம் காணையிலும் பொதுமக்களுக்கு நல உதவிகளை வழங்கிப் பேசுகிறாா். இதுபோன்று விக்கிரவாண்டி அருகிலுள்ள சிந்தாமணி பகுதியில் அமைந்துள்ள முன்னாள் முதல்வா் கருணாநிதி சிலைக்கு தெற்கு மாவட்ட திமுக அவைத் தலைவா் ம.ஜெயச்சந்திரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்துவாா். இந்த நிகழ்வில் முன்னாள் எம்எல்ஏ அன்னியூா் அ.சிவா உள்ளிட்ட நிா்வாகிகள் பங்கேற்க உள்ளனா்.

இதுபோன்று விழுப்புரம் தெற்கு மாவட்ட திமுக சாா்பில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் திமுக கொடியேற்றி, பொதுமக்களுக்கு நல உதவிகள் வழங்கப்படவுள்ளதாக, மாவட்ட திமுக பொறுப்பாளா் பொன்.கெளதமசிகாமணி தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.