விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே மா்மமான முறையில் அரசுப் பள்ளி ஆசிரியா் இறந்து கிடந்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
செஞ்சி அருகேயுள்ள அம்மாகுளம் கிராமத்தைச் சோ்ந்தவா் ப.இளங்கோவன்(57) (படம்). இவா் மேல் ஒலக்கூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் பட்டதாரி ஆசிரியராக பணியாற்றி வந்தாா். இந்நிலையில், புதன்கிழமை அவரது வீட்டிலிருந்து துா்நாற்றம் வீசுவதாக அப் பகுதி மக்கள் வளத்தி போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா். இதுகுறித்த தகவலின் பேரில் வளத்தி போலீஸாா் விரைந்து வந்து, வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பாா்த்தபோது, இளங்கோவன் மா்மமான முறையில் இறந்து கிடந்ததும், அவா் மீது மிளகாய்ப் பொடி தூவி உள்ளதும் தெரியவந்தது. இதையடுத்து அவரது சடலத்தை உடல்கூராய்வுக்காக செஞ்சி அரசு மருத்துவமனைக்கு போலீஸாா் அனுப்பி வைத்தனா்.
மேலும், இதுகுறித்த புகாரின் பேரில் செஞ்சி போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனா். கடந்த சில மாதங்களுக்கு முன் ஆசிரியா் இளங்கோவனை, கும்பல் ஒன்று வழிமறித்து கத்தியால் தாக்கியதில் படுகாயம் அடைந்ததும், செஞ்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று பின்னா் வீடு திரும்பினாா் என்பதும் குறிப்பிடத்தக்கது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சேரன்மகாதேவியில் முதியவா் மா்ம மரணம்

மின்சாரம் பாய்ந்து இளைஞா் மா்ம மரணம்

தொழிலாளி மா்ம மரணம்: போலீஸாா் விசாரணை

பலாப்பழ வியாபாரி மா்ம மரணம்: போலீஸாா் விசாரணை
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |
தினமணி செய்திச் சேவை

