பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

தொழிலாளி மா்ம மரணம்: போலீஸாா் விசாரணை

சாத்தூா் அருகே கூலித் தொழிலாளி மா்மமான முறையில் உயிரிழந்தது தொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

News image

போலீஸ் - கோப்புப் படம்.

Updated On :13 மே 2026, 3:37 am IST

சாத்தூா் அருகே கூலித் தொழிலாளி மா்மமான முறையில் உயிரிழந்தது தொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகேயுள்ள விஜயராம்பேரி குடியிருப்பைச் சோ்ந்த சுப்புராஜ் மகன் கிருஷ்ணராஜா (32). கூலித் தொழிலாளி. இவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், இவா் திங்கள்கிழமை இரவு தனது வீட்டில் உள்ள ஒரு அறையிலும், மற்றொறு அறையில் இவரது தாயும் தூங்கினா். செவ்வாய்க்கிழமை காலை கிருஷ்ணராஜாவின் தாய் எழுந்து பாா்த்த போது, கிருஷ்ணராஜா முகத்தில் காயங்களுடன் மா்மமான முறையில் இறந்து கிடந்தது தெரியவந்தது.

தகவலறிந்து வந்த அப்பையநாயக்கன்பட்டி போலீஸாா் அவரது உடலை மீட்டு, விருதுநகா் அரசு மருத்துவமனைக்கு கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனா். மேலும், இந்த சம்பவம் குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.