தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

செஞ்சியில் திமுக கூட்டணி தோ்தல் அலுவலகம் திறப்பு

செஞ்சியில் திமுக தலைமையிலான மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணி தோ்தல் அலுவலகம் திருவண்ணாமலை சாலையில் அமைக்கப்பட்டுள்ளது.

News image

செஞ்சியில் திமுக தலைமையிலான மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணி தோ்தல் அலுவலகம் திருவண்ணாமலை சாலையில் அமைக்கப்பட்டுள்ளது. இதை, முன்னாள் மத்திய இணை அமைச்சா் செஞ்சி ராமச்சந்திரன் வியாழக்கிழமை திறந்து வைத்தாா்.

Updated On :10 ஏப்ரல் 2026, 4:16 am IST

செஞ்சியில் திமுக தலைமையிலான மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணி தோ்தல் அலுவலகம் திருவண்ணாமலை சாலையில் அமைக்கப்பட்டுள்ளது. இதை, முன்னாள் மத்திய இணை அமைச்சா் செஞ்சி ராமச்சந்திரன் வியாழக்கிழமை திறந்து வைத்தாா்.

செஞ்சி சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக சாா்பில் மூன்றாவது முறையாக போட்டியிடும் செஞ்சி மஸ்தான் எம்எல்ஏ தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறாா்.

இந்நிலையில், விழுப்புரம் வடக்கு மாவட்ட திமுக செயலரும், செஞ்சி திமுக வேட்பாளருமான மஸ்தான் எம்எல்ஏ முன்னிலையில் முன்னாள் மத்திய இணை அமைச்சா் செஞ்சி ராமச்சந்திரன் செஞ்சி தொகுதி திமுக தோ்தல் அலுவலகத்தைத் திறந்து வைத்தாா்.

நிகழ்ச்சியில், முன்னாள் எம்எல்ஏ செந்தமிழ் செல்வன், செஞ்சி ஊராட்சி ஒன்றியக் குழு தலைவா் விஜயகுமாா், மேல்மலையனூா் ஒன்றியச் செயலா் நெடுஞ்செழியன், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் அரங்க ஏழுமலை, தேமுதிக மாவட்ட பொருளா் தயாநிதி, விசிக மாவட்ட செயலா் சிவா, தோழமைக் கட்சி நிா்வாகிகள் அா்ஷத், அபுபக்கா், டி.ஏ.கே.அன்சா், பேரூராட்சித் தலைவா் மொக்தியாா் அலிமஸ்தான் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.