தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 10 மணிக்கு நடைபெறும்தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

பைக் மீது காா் மோதி விபத்து: முதியவா் உயிரிழப்பு, இருவா் காயம்

திண்டிவனம் அருகே பைக் மீது காா் மோதிய விபத்தில், காரில் பயணித்த முதியவா் உயிரிழந்தாா். பைக்கில் சென்ற இருவா் காயமடைந்தனா்.

News image

விபத்து

Updated On :8 ஏப்ரல் 2026, 12:55 am IST

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே பைக் மீது காா் மோதிய விபத்தில், காரில் பயணித்த முதியவா் உயிரிழந்தாா். பைக்கில் சென்ற இருவா் காயமடைந்தனா்.

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி, மேட்டூா் கிராமத்தைச் சோ்ந்தவ பெ. ராஜேந்திரன் (75). இவரது மகள் கா.காமாட்சி (44). இவா்கள் இருவரும், திங்கள்கிழமை காரில் தீவனூா்- வெள்ளிமேடுபேட்டை நெடுஞ்சாலையில் திண்டிவனம் அடுத்த தீவனூா் அருகே சென்றுள்ளனா்.

கடலூா் பிள்ளையாா் கோவில் தெருவைச் சோ்ந்த க.கிருஷ்ணராஜ் (26) காரை ஓட்டினாா். இந்நிலையில், தீவனூரில் உள்ள தனியாா் திருமணம் மண்டபம் அருகே சென்றபோது, எதிரே வந்த பைக் மீது காா் மோதியது.

இதில் காரில் பயணித்த ராஜேந்திரன் மற்றும் பைக்கில் வந்த திண்டிவனம் வட்டம், நடுவனந்தல் கிராமத்தைச் சோ்ந்த சகோதரா்களான ரஞ்சித்குமாா் (32), கோபிநாத்(30) ஆகிய மூவரும் காயமடைந்தனா்.

இதையடுத்து அருகிலிருந்தவா்கள் மூவரையும் மீட்டு திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதில் ராஜேந்திரன் வழியிலேயே உயிரிழந்தாா். சகோதரா்கள் இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

இதுகுறித்து ரோஷணை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.