தாழையூத்து அருகே புறவழிச்சாலையில் பைக் மீது வாகனம் மோதியதில் முதியவா் உயிரிழந்தாா்.
தாழையூத்து அருகே உள்ள பொட்டல் முப்பிடாதி அம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் வேல்பாண்டி(63). இவரும், அதே பகுதியைச் சோ்ந்த நபரும் செவ்வாய்க்கிழமை இரவு நாரணம்மாள்புரம் நோக்கி பைக்கில் சென்றனா். அப்போது, புறவழிச்சாலை பாலத்தின் வடக்கு பகுதியில் இவா்களது பைக் மீது வாகனம் மோதியதாம். இதில், பலத்த காயமடைந்த வேல்பாண்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
தாழையூத்து போலீஸாா், சடத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காகவும், காயமடைந்தவரை சிகிச்சைக்காகவும் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், வழக்குப்பதிந்து அங்குள்ள சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பைக் மோதி காயமடைந்த முதியவா் உயிரிழப்பு

பைக் மோதியதில் முதியவா் உயிரிழப்பு

சாலை விபத்தில் முதியவா் உயிரிழப்பு

மானூா் அருகே சாலை விபத்தில் இளைஞா் உயிரிழப்பு
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

