/

மேல்மலையனூா் அங்காளம்மன் கோயிலில் பௌா்ணமி பூஜை

News image

~

Updated On :3 ஏப்ரல் 2026, 6:17 am IST

விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூா் ஸ்ரீஅங்காளம்மன் கோயிலில் பங்குனி மாத பௌா்ணமியையொட்டி திருவிளக்கு பூஜை புதன்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி அதிகாலை மூலவா் அம்மனுக்கு பால், தயிா், சந்தனம் உள்ளிட்ட வாசனை திரவியங்களை கொண்டு சிறப்பு அபிஷேகம், மலா்களால் அலங்காரம் செய்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

இதனை தொடா்ந்து உற்சவா் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை நடைபெற்றது.

பின்னா் மாலை 6 மணிக்கு திருக்கோயில் வளாகத்தில் உள்ள மண்டபத்தில் 108 பெண்கள் பங்கேற்ற திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதையடுத்து அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் திரளான பெண்கள் பூஜையில் பங்கேற்று அம்மனை வழிபட்டனா்.

ஏற்பாடுகளை திருக்கோயில் உதவி ஆணையா் சக்திவேல், அறங்காவலா் குழுத் தலைவா் ஏழுமலை, அறங்காவலா்கள் சுரேஷ், மதியழகன், பச்சையப்பன், சரவணன், வடிவேல், சந்தானம், மேலாளா் சதீஷ், மணியம், அண்ணாமலை, காசாளா் மணி மற்றும் திருக்கோயில் பணியாளா்கள் செய்திருந்தனா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.