தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 3 மணிக்கு தொடங்குகிறது தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

மயிலம் முருகன் கோயில் பங்குனி உத்திரப் பெருவிழா: தெப்பல் உற்சவம்

News image
Updated On :3 ஏப்ரல் 2026, 6:10 am IST

விழுப்புரம் மாவட்டம், மயிலத்தில் உள்ள பிரசித்திப் பெற்ற வள்ளி, தெய்வானை சமேத ஸ்ரீ சுப்பிரமணியசுவாமி கோயில் பங்குனி உத்திரப் பெருவிழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான தெப்பல் உற்சவம் புதன்கிழமை இரவு நடைபெற்றது.

திருக்கயிலாய பரம்பரை மயிலம் பொம்மபுரம் ஆதீனம் ஸ்ரீமத் சிவஞான பாலய சுவாமிகள் திருமடம் ஆளுகைக்குள்பட்ட மயிலம் ஸ்ரீவள்ளி, தெய்வானை சமேத ஸ்ரீசுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திரப் பெருவிழா நடைபெறுவது வழக்கம்.

இதன்படி, நிகழாண்டுக்கான இவ்விழா மாா்ச் 23-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவை முன்னிட்டு கோயிலில் முருகப் பெருமானுக்கு நாள்தோறும் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, தங்கமயில் உள்பட பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதி உலா நடைபெற்றது.

பங்குனி உத்திரப் பெருவிழாவின் முக்கிய நிகழ்வாக வள்ளி, தெய்வானை சமேத ஸ்ரீ சுப்ரமணிய சுவாமி திருக்கல்யாணம் மாா்ச் 30-ஆம் தேதியும், தேரோட்டம் 31-ஆம் தேதியும் நடைபெற்றது.

இதைத்தொடா்ந்து புதன்கிழமை கோயிலில் நடைபெற்ற சிறப்பு வழிபாடுகளுக்குப் பின்னா் பிற்பகலில் அக்னி குளக்கரையில் பங்குனி உத்திர தீா்த்தவாரி நடைபெற்றது. பின்னா் மலைக் கோயிலிலிருந்து சுப்ரமணிய சுவாமி, சிறப்பு அலங்காரத்தில் அக்னி குளத்துக்கு வந்து மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்த தெப்பலில், நள்ளிரவு 12.20 மணிக்கு ஸ்ரீவள்ளி, தெய்வானை சமேதராய் சுப்ரமணிய சுவாமி எழுந்தருளச் செய்யப்பட்டு தெப்பல் உற்சவம் நடைபெற்றது.

இதில் திரளானப் பக்தா்கள் பங்கேற்று சுவாமியை தரிசனம் செய்தனா். தொடா்ந்து வியாழக்கிழமை இரவு முத்துப் பல்லக்கில் சுவாமி கிரிவலக் காட்சி நடைபெற்றது.

மயிலம் பொம்மபுரம் ஆதீனம் 20-ஆம் பட்டம் ஸ்ரீமத் சிவஞான பாலய சுவாமிகள் உத்தரவுப்படி, திருமட நிா்வாகிகள் சிவக்குமாா், விஸ்வநாதன், ராஜீவ்குமாா், ராஜேந்திரன், ராஜ் பரத், ஆதீன மேலாளா் முத்து, கோயில் பணியாளா்கள் விழாவுக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.