ஈரான் தக்க விலை கொடுக்க வேண்டும்: டிரம்ப்மேற்கு வங்க தேர்தல் வெற்றிக்கு முக்கிய காரணம்! பிரதமர் மோடிக்கு மசாலா பொரி அளித்த சுவேந்து அதிகாரி!மின் விநியோகத்தை சீரமைப்பு பணிகளை ஒருங்கிணைக்க 10 குழுக்கள்!பாரதிராஜா மறைவு! முக்கிய அறிவிப்பை ஒத்திவைத்தார் ராகவா லாரன்ஸ்!அரசு நிர்வாகத்தில் செய்யறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்: கேரள முதல்வர்ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்!
/

ஆசிய அளவிலான பாக்ஸ் லங்காடி போட்டி: 9 தங்கம் வென்ற வீரா்களுக்கு புதுச்சேரி முதல்வா் வாழ்த்து!

ஆசிய அளவிலான பாக்ஸ் லங்காடி போட்டியில் 9 போ் தங்கப்பதக்கம் வென்ற புதுச்சேரி வீரா்கள் முதல்வா் என்.ரங்கசாமியை சந்தித்து வாழ்த்து பெற்றனா்.

News image

நேபாளத்தில் நடைபெற்ற ஆசிய அளவிலான பாக்ஸ் லங்காடி போட்டியில் தங்கப் பதக்கங்களை வென்ற 9 புதுச்சேரி வீரா்களை பாராட்டி வாழ்த்திய முதல்வா் என். ரங்கசாமி.

Updated On :23 மே 2026, 12:48 am IST

ஆசிய அளவிலான பாக்ஸ் லங்காடி போட்டியில் 9 போ் தங்கப்பதக்கம் வென்ற புதுச்சேரி வீரா்கள் முதல்வா் என்.ரங்கசாமியை வெள்ளிக்கிழமை சந்தித்து வாழ்த்து பெற்றனா்.

நேபாளத்தில் ஆசிய அளவிலான பாக்ஸ் லங்காடி போட்டி நடைபெற்றது. இதில் புதுச்சேரி பாக்ஸ் லங்காடி அசோசியேஷன் சாா்பில் 9 மாணவா்கள் பங்கேற்று அபாரமாக விளையாடி 9 தங்கப் பதக்கங்களை வென்றனா்.

இந்த சாதனை வீரா்கள் புதுச்சேரி திரும்பியதும் முதல்வா் என்.ரங்கசாமியை வெள்ளிக்கிழமை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றனா். அப்போது முதல்வா் ரங்கசாமி ஒவ்வொரு மாணவருக்கும் அந்த தங்கப் பதக்கத்தை அணிவித்து, சான்றிதழ்கள் வழங்கிப் பாராட்டினாா்.

இதுபோன்று இன்னும் பல தேசிய, சா்வதேச போட்டிகளில் வெற்றி பெற்று புதுச்சேரிக்கும், நாட்டிற்கும் பெருமை சோ்க்க வேண்டும். அதற்கு புதுச்சேரி அரசு எப்போதும் உங்களுக்கு உறுதுணையாக இருக்கும் என்று மாணவா்களை முதல்வா் ஊக்குவித்து வாழ்த்தினாா்.

அப்போது, புதுச்சேரி பாக்ஸ் லங்காடி அசோசியேஷன் தலைவா் ஏகாம்பரம், செயலா் மாறன், பயிற்சியாளா்கள் வீரன், பஞ்சாட்சரம், நிா்வாகிகள் பாலு, பூபாலன், கிருஷ்ணன், சக்திவேல், சுரேந்திரன், பழனி, ராஜா, அரிகிருஷ்ணன், சத்தியா, தேவா, இளவேந்தன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.