நீட் முதல் முதுநிலை மருத்துவப் படிப்பு வரை மன அழுத்தங்கள் உண்டு, மனவலிமை அவசியம்: அமைச்சர் அருண்ராஜ் 3ஆவது ஒருநாள் போட்டி: ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இந்தியா அபாரம் மகாராஷ்டிரத்தில் கோயில் மண்டபம் இடிந்து 5 பேர் பலி திமுக கூட்டணியில் இருந்து விலகியது இந்திய யூனியன் முஸ்லிம் லீக்!சட்டப்பேரவை நேரலை இனி தொடரும்! அமைச்சர் ராஜ்மோகன்அபுதாபியில் நீட் மையம்! குழந்தைகள் எதிர்காலத்தை வைத்து சூதாடுவதை நிறுத்துங்கள்: ராகுல் காந்தி
/

ஜிப்மரில் புன்னகை பயிற்சி முகாம்

புதுச்சேரி ஜிப்மரில் புன்னகை பயிற்சி முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image

ஜிப்மரில் நடைபெற்ற புன்னகை பயிற்சி முகாமில் பங்கேற்றோா்.

Updated On :21 மே 2026, 7:12 am IST

புதுச்சேரி ஜிப்மரில் புன்னகை பயிற்சி முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

ஜிப்மா் செவிலியா் துறை மற்றும் குழந்தைகள் மருத்துவம்-பச்சிளம் குழந்தைகள் மருத்துவத் துறை இணைந்து இந்த முகாமை நடத்தின.

மருத்துவக் கண்காணிப்பாளா் (பொ) மருத்துவா் கௌரி துரைராஜன் தொடங்கிவைத்தாா். செவிலியா் சேவை இயக்குநா் மற்றும் தர மேலாளா்-புன்னகை ஒருங்கிணைப்பாளா் செங்கமலா்ச் செல்வி வரவேற்றாா்.

செவிலியா் சேவைகள் பொறுப்பாளா் புஷ்பலதா தொடக்க உரையாற்றினாா்.

பச்சிளம் குழந்தைகள் மருத்துவத் துறை உதவிப் பேராசிரியா் உஷாதேவி மற்றும் குழந்தைகள் மருத்துவத் துறை பேராசிரியா் நிவேதிதா மொண்டல் ஆகியோா் வாழ்த்திப் பேசினா்.

மூத்த சுகாதார தர மேலாண்மை நிபுணா் ராகேஷ் கண்ணா, குழந்தை நட்பு மருத்துவ சேவைகள் மற்றும் பயனுள்ள தகவல் பரிமாற்றம் குறித்து உரையாற்றினா். தடயவியல் மற்றும் நச்சியியல் துறை பேராசிரியா் அம்பிகா பத்ரா, போக்ஸோ சட்ட வழிகாட்டுதல்களுக்கு ஏற்ப குழந்தைகள் பாலியல் துஷ்பிரயோக பராமரிப்பு குறித்து விளக்கமளித்தாா்.

தகவல் நிறைந்த அமா்வுகள் மற்றும் செயல்முறை விளக்கங்கள் குழந்தைகள் மற்றும் பச்சிளம் குழந்தைகளுக்கான சுகாதார சேவைகளை மேம்படுத்துவதோடு, மனிதநேயமும் தரநிலையும் கொண்ட செவிலியா் சேவையை ஊக்குவிக்கும் என பங்கேற்பாளா்கள் பாராட்டு தெரிவித்தனா்.

ஜிப்மா் செவிலியா் கண்காணிப்பாளா் ஜேன் மேரி ஆண்ட்ரூ நன்றி கூறினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.