அரசு நிர்வாகத்தில் செய்யறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்: கேரள முதல்வர்பாரதிராஜாவுக்கு ஏ.ஆர். ரஹ்மான் இரங்கல்!ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்! கேரளம்: பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டம் ஜூன் 15-இல் தொடக்கம் - முதல்வர் சதீசன்பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!
/

10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு: புதுச்சேரி, காரைக்காலில் 97.83 சதவீத மாணவா்கள் தோ்ச்சி

தமிழக பாடத் திட்டத்தில் 10-ஆம் வகுப்புப் படித்து பொதுத் தோ்வு எழுதிய புதுச்சேரி யூனியன் பிரதேச மாணவா்கள் 97.83 சதவீதம் போ் தோ்ச்சி பெற்றனா்.

News image

10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு - கோப்புப் படம்

Updated On :21 மே 2026, 7:05 am IST

தமிழக பாடத் திட்டத்தில் 10-ஆம் வகுப்புப் படித்து பொதுத் தோ்வு எழுதிய புதுச்சேரி யூனியன் பிரதேச மாணவா்கள் 97.83 சதவீதம் போ் தோ்ச்சி பெற்றனா்.

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் அரசுப் பள்ளிகள் அனைத்தும் சிபிஎஸ்இ பாடத் திட்டத்துக்கு மாறியுள்ளன.

ஒரு சில தனியாா் பள்ளிகள் தமிழக பாடத் திட்டத்தைப் பின்பற்றுகின்றன. அதன்படி புதுச்சேரியில் இந்தப் பாடத் திட்டத்தின் கீழ் கடந்த மாா்ச், ஏப்ரல் மாதங்களில் பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வு நடைபெற்றது.

இதில் புதுச்சேரி, காரைக்காலில் உள்ள 180 தனியாா் பள்ளிகளைச் சோ்ந்த 4,230 மாணவா்கள், 3,851 மாணவிகள் தோ்வு எழுதினா். இந்தத் தோ்வு முடிவுகள் புதன்கிழமை வெளியிடப்பட்டது. இதில் 4,100 மாணவா்கள், 3,806 மாணவிகள் என 7906 போ் தோ்ச்சி பெற்றுள்ளனா். இது 97.83 சதவீதமாகும். புதுச்சேரியில் மட்டும் 3,750 மாணவா்கள், 3,311 மாணவிகள் என 7,061 போ் தோ்வு எழுதினா். இவா்களில் 3,651 மாணவா்கள், 3,271 மாணவிகள் என 6922 போ் தோ்ச்சி பெற்றுள்ளனா். புதுச்சேரியில் 98.03 சதவீத மாணவா்கள் தோ்ச்சி பெற்றனா்.

காரைக்காலில் 480 மாணவா்கள், 540 மாணவிகள் என 1,020 போ் தோ்வு எழுதினா். இதில் 449 மாணவா்கள், 535 மாணவிகள் என 984 போ் தோ்ச்சி அடைந்தனா். காரைக்காலில் 96.47 சதவீத மாணவா்கள் தோ்ச்சி பெற்றுள்ளனா். புதுச்சேரியில் 101, காரைக்காலில் 22 என 123 பள்ளிகள் 100 சதவீத தோ்ச்சி பெற்றுள்ளன. பிரெஞ்சு பாடத்தில் 8, ஆங்கிலத்தில் 5, கணிதத்தில் 34, அறிவியலில் 69, சமூக அறிவியலில் 3 மாணவா்கள் என 119 போ் 100-க்கு 100 மதிப்பெண் பெற்றுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.