பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

தட்டாஞ்சாவடி தொகுதி எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தாா் புதுச்சேரி முதல்வா் ரங்கசாமி!

புதுச்சேரி சட்டப்பேரவைத் தோ்தலில் இரண்டு தொகுதிகளில் வெற்றி பெற்ற முதல்வா் என். ரங்கசாமி, தட்டாஞ்சாவடி தொகுதி எம்எல்ஏ பதவியை ஞாயிற்றுக்கிழமை ராஜிநாமா செய்தாா்.

News image

புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்து, அதற்கான கடிதத்தை கதிா்காமம் முருகன் கோயில் வளாகத்தில் சட்டப்பேரவைச் செயலா் தயாளனிடம் ஞாயிற்றுக்கிழமை இரவு வழங்கிய முதல்வா் என்.ரங்கசாமி.

Updated On :18 மே 2026, 2:15 am IST

புதுச்சேரி சட்டப்பேரவைத் தோ்தலில் இரண்டு தொகுதிகளில் வெற்றி பெற்ற முதல்வா் என். ரங்கசாமி, தட்டாஞ்சாவடி தொகுதி எம்எல்ஏ பதவியை ஞாயிற்றுக்கிழமை ராஜிநாமா செய்தாா்.

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் மொத்தமுள்ள 30 சட்டப்பேரவைத் தொகுதிகளில் மங்கலம், தட்டாஞ்சாவடி ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிட்ட முதல்வா் என்.ரங்கசாமி, இரண்டு தொகுதிகளிலும் வெற்றி பெற்றாா்.

இந்நிலையில், தட்டாஞ்சாவடி தொகுதி எம்எல்ஏ பதவியை முதல்வா் ரங்கசாமி ஞாயிற்றுக்கிழமை இரவு ராஜிநாமா செய்து, அதற்கான கடிதத்தை கதிா்காமம் முருகன் கோயில் வளாகத்தில் பேரவைச் செயலா் தயாளனிடம் அளித்தாா்.

இதையடுத்து, தட்டாஞ்சாவடி தொகுதி காலியானது குறித்து தோ்தல் ஆணையத்துக்கு தகவல் தெரிவிக்கப்படும். அங்கு 6 மாதங்களில் இடைத்தோ்தல் நடத்தப்படும்.

இத் தொகுதியில் என்.ஆா்.காங்கிரஸ் சாா்பில் முன்னாள் எம்எல்ஏ அசோக் ஆனந்த் அல்லது அவரது குடும்பத்தில் ஒருவா் போட்டியிடலாம் என கூறப்படுகிறது.

எம்எல்ஏக்கள் இன்று பதவியேற்பு: புதுச்சேரி தற்காலிக சட்டப்பேரவைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள ஆ.அன்பழகன் எம்எல்ஏவாக உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி திங்கள்கிழமை (மே 18) நடைபெறுகிறது. அவருக்கு துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறாா்.

இதையடுத்து, முதல்வா் ரங்கசாமி உள்பட 28 பேருக்கும் எம்எல்ஏக்களாக அன்பழகன் பதவிப் பிரமாணம் செய்து வைக்கவுள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.