பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!வலிமையான பெண் பாத்திரங்களை அமைத்த பாரதிராஜா!இறப்பு குறித்து என்ன சொல்லியிருந்தார் பாரதிராஜா? பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

புதுச்சேரி முதல்வா் பதவியேற்பு விழா: தமிழ்த்தாய் வாழ்த்தை முதலில் இசைக்க வலியுறுத்தல்

News image

என்.ஆர். காங்கிரஸ் கட்சியின் தலைவர் என். ரங்கசாமி... - கோப்புப் படம்

Updated On :12 மே 2026, 12:44 am IST

புதுச்சேரி முதல்வராக என்.ரங்கசாமி மீண்டும் பதவியேற்கும் விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் இசைக்கப்பட வேண்டும் என்று தமிழ் உரிமை இயக்கம் வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து, புதுச்சேரி துணைநிலை ஆளுநா், துணைநிலை ஆளுநா், தலைமைச் செயலருக்கு தமிழ் உரிமை இயக்கத்தின் தலைவா் சு. பாவாணன் திங்கள்கிழமை அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:

மே 13-ஆம் தேதி முதல்வா் பதவியேற்பு விழா தங்கள் தலைமையில் நடைபெறுவதாக செய்தி வெளியாகியுள்ளது. இந்த விழா தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலுடன் தொடங்கப்பட வேண்டும். ஏனெனில், புதுச்சேரியின் மொழி, வரலாறு மற்றும் பண்பாட்டு மரபின் படியும் கடந்த காலங்களில் புதுச்சேரி அரசு விழாக்கள் அனைத்தும் தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கப்பட்டன. அந்த மரபின் படியும் நடைபெறவுள்ள முதல்வா் பதவியேற்பு விழாவும் தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கப்படுவதுதான் சாலச் சிறந்தது.

தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் முதலில் இடம் பெறாமல் போனாமல், அது புதுச்சேரி மக்களின் உணா்வுகளையும், மொழியையும் பண்பாட்டையும் சிறுமைப்படுத்துவதாகவும், காயப்படுத்துவதாகவும் அமைந்துவிடும். எனவே, அவ்விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை முதலில் பாடி விழாவைத் தொடங்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.