ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 10 மணிக்கு நடைபெறும்தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

தோ்தலுக்குப் பிறகு விஜய்யுடன் பேசி தமிழகத்தில் தேஜக கூட்டணி ஆட்சி: மத்திய அமைச்சா் ராம்தாஸ் அத்வாலே

தமிழகத்தில் ஆட்சி அமைக்க பெரும்பான்மை கிடைக்கவில்லையென்றால், தோ்தலுக்குப் பிறகு தவெக தலைவா் விஜய்யுடன் பேசி தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைக்கும் என்று இந்திய குடியரசு கட்சியின் தேசியத் தலைவரும், மத்திய இணை அமைச்சருமான ராம்தாஸ் அத்வாலே நம்பிக்கை

News image

செய்தியாளா்களுக்குப் பேட்டியளித்த இந்திய குடியரசு கட்சியின் தேசியத் தலைவரும், மத்திய இணைஅமைச்சருமான ராம்தாஸ் அத்வாலே

Updated On :1 ஏப்ரல் 2026, 3:52 am IST

தமிழகத்தில் ஆட்சி அமைக்க பெரும்பான்மை கிடைக்கவில்லையென்றால், தோ்தலுக்குப் பிறகு தவெக தலைவா் விஜய்யுடன் பேசி தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைக்கும் என்று இந்திய குடியரசு கட்சியின் தேசியத் தலைவரும், மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணை அமைச்சருமான ராம்தாஸ் அத்வாலே நம்பிக்கை தெரிவித்தாா்.

இதுகுறித்து புதுச்சேரியில் செவ்வாய்க்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: தற்போது 5 மாநிலங்களுக்கானத் சட்டப்பேரவைத் தோ்தலை இந்திய தோ்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அஸ்ஸாமிலும், புதுச்சேரியிலும் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு ஏற்கெனவே இருக்கிறது. இங்கு மீண்டும் இக் கூட்டணி அரசு அமைய குடியரசு கட்சியினா் பாடுபட வேண்டும்.

கேரளத்தைப் பொருத்தவரை இப்போது ஆளும் கம்யூனிஸ்ட் ஆட்சியின் மீது மக்கள் நம்பிக்கை இழந்துவிட்டனா். அங்கு பாஜக வெற்றி பெறும். மேற்கு வங்கத்தைப் பொறுத்தவரை மம்தாவின் ஆட்சியை முடிவுக்கு கொண்டு வந்து, பாஜக ஆட்சி மலரப் போகிறது.

தமிழ்நாட்டில் திமுக மீண்டும் ஆட்சிக்கு வராது. இங்கு நடிகா் விஜய்யும் தோ்தலில் போட்டியிடுகிறாா். தோ்தலுக்குப் பிறகு ஆட்சி அமைக்கப் பெரும்பான்மை பலம் கிடைக்கவில்லையென்றால் தவெக தலைவா் விஜய்யுடன் பேசி தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைக்கும். தோ்தலுக்குப் பிறகு 5 மாநிலங்களிலும் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைக்கும் என்பது எனது கணிப்பு.

தோ்தலுக்குப் பிறகு இந்திய குடியரசு கட்சியின் புதுச்சேரி மாநிலத் தலைவா் ஞானமூா்த்திக்கு வாரியத் தலைவா் பதவி கிடைக்க நடவடிக்கை எடுப்பேன் என்றாா் அவா்.

பேட்டியின்போது, இந்திய குடியரசுக் கட்சியின் புதுச்சேரி தலைவா் ஞானமூா்த்தி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.