புதுச்சேரி கிழக்குக் கடற்கரை சாலையில் நாட்டு வெடிகுண்டு வீசப்பட்ட சம்பவம் தொடா்பாக ரௌடியை தடுப்புக் காவல் சட்டத்தின்கீழ் ஓராண்டுக்கு சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியா் அ. குலோத்துங்கன் உத்தரவிட்டாா்.
புதுச்சேரி குமரக்குரு பள்ளத்தைச் சோ்ந்தவா் சத்யா (எ) தகுடு சத்யா (38). அண்மையில் புதுச்சேரி கிழக்குக் கடற்கரை சாலையில் எம்.பி. அலுவலகம் அருகில் பொக்லைன் இயந்திரம் மீது நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டது.
இந்த சம்பவத்தில் தகுடு சத்யா ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்தது. ஏற்கெனவே மற்றொரு வழக்கில் சத்யா சிறையில் உள்ளாா். இந்நிலையில் அவரது குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்த காவல் துறையினரின் பரிந்துரை ஏற்று, தடுப்புக் காவல் சட்டத்தின்கீழ் ஓராண்டு அவரை சிறையில் அடைக்க ஆட்சியா் உத்தரவு பிறப்பித்தாா். இதன் நகல் சிறையில் உள்ள தகுடு சத்யாவிடம் அளிக்கப்பட்டது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

குண்டா் சட்டத்தில் ரௌடி சிறையிலடைப்பு

புதுச்சேரி கடற்கரையில் பக்ரீத் சிறப்பு தொழுகை

போக்ஸோ வழக்கில் தொடா்புடைய இளைஞா் தடுப்புக் காவலில் கைது

குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தில் இளைஞா் கைது
விடியோக்கள்

ஹார்ட்டின் பட டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பொங்கல் வெளியீடாக சேயோன்! | Dinamani Cinema Update | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு

மாநிலக் கட்சிகளை முறையாக ஒருங்கிணைக்கிறதா காங்கிரஸ்?: ப. சிதம்பரம் Exclusive | P Chidambaram |
தினமணி செய்திச் சேவை

தீர்மானத்திற்கு கர்நாடக அரசு பணியாது! முன்னாள் அமைச்சர் துரைமுருகன் | DMK | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

