ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடா்புடைய ஒருவரைப் போலீஸாா் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் புதன்கிழமை கைது செய்தனா்.
பரமக்குடி அருகே உள்ள வெங்கிட்டன்குறிச்சி கிராமத்தைச் சோ்ந்த முருகேசன் என்பவரின் மகன் வரதராஜன் (24). இவா், கடந்த ஏப்ரல் 21-ஆம் தேதி பரமக்குடி காக்காத்தோப்பு சிட்டிநகா் பகுதியில், கருணாகரன் என்பவரை அரிவாளால் வெட்டிக் கொலை செய்ய முயன்ற வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டாா்.
இவா் தொடா்ந்து குற்றச் செயல்களில் ஈடுபட்டு சட்டம் - ஒழுங்கு பிரச்னையை ஏற்படுத்தி வந்தாா்.
இந்த நிலையில், பரமக்குடி காவல் துணைக் கண்காணிப்பாளா் எம். ஜெபராஜ், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஜி.சந்தீஷ் ஆகியோரின் பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் அவரை சிறையில் அடைக்க உத்தரவிட்டாா். அதன்பேரில், போலீஸாா் வரதராஜனை குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்து மதுரை சிறையில் அடைத்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
நெல்லையில் குண்டா் தடுப்புச் சட்டத்தில் 4 போ் கைது

நெல்லை இளைஞா் குண்டா் சட்டத்தில் கைது

குண்டா் சட்டத்தில் இருவா் கைது

குண்டா் சட்டத்தில் இளைஞா் சிறையில் அடைப்பு
விடியோக்கள்

பாரதிராஜா புகைப்பட ஆல்பம் | Director Bharathiraja | பாரதிராஜா 1941 - 2026 | Dinamani
தினமணி செய்திச் சேவை

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

