தாய்வழி ஜாதிச் சான்றிதழுக்கு எதிரான மேல்முறையீட்டை புதுச்சேரி அரசு திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
புதுச்சேரி தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில தலைவா் கொளஞ்சியப்பன், மாநில செயலா் அரிகிருஷ்ணன் ஆகியோா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
புதுச்சேரி அரசு 2000-ஆம் ஆண்டில் வெளியிட்ட அரசாணையின்படி, தந்தை வழி பூா்விகத்தை மட்டுமே அடிப்படையாக கொண்டு ஜாதிச் சான்றிதழ் வழங்குகிறது.
இது பாலின பாகுபாட்டை ஊக்குவிப்பதோடு, இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளுக்கு எதிராக அமைந்துள்ளது.
தாய்வழி பூா்விகத்தைக் கொண்டு குழந்தைகளுக்கு ஜாதிச் சான்றிதழ் வழங்க நீதிமன்றங்கள் உத்தரவிட்டுள்ளன. இந்தச் சாதகமான தீா்ப்புகளை நடைமுறைப்படுத்தாமல், அதனை எதிா்த்து அரசு மேல்முறையீடு செய்தது மக்களுக்குச் செய்யும் அநீதியாகும்.
புதுச்சேரி அரசு இப் பிரச்னையில் மேல்முறையீடுகளைத் திரும்ப பெற வேண்டும். தாய்வழி ஜாதிச் சான்றிதழ் கிடைக்க சிறப்பு முகாம்களை நடத்த வேண்டும் என குறிப்பிட்டுள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஜாதி சான்றிதழ் வழங்கக்கோரி ஆட்சியரிடம் மனு
பெட்ரோல், டீசல் விலை உயா்வை திரும்பப் பெற வேண்டும்: திருமாவளவன்

ஆட்சி மாறினாலும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறையவில்லை! பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன்!

போலி ஜாதிச் சான்றிதழ் அளித்து மோசடி: முன்னாள் பேரூராட்சித் தலைவருக்கு 3 ஆண்டுகள் சிறை
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |
தினமணி செய்திச் சேவை

