அம்மாபேட்டை பேரூராட்சித் தலைவா் பதவிக்கு போலி ஜாதிச் சான்றிதழ் அளித்து மோசடி செய்த அதிமுக பிரமுகருக்கு 3 பிரிவுகளின் கீழ் தலா 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ஒரு பிரிவில் 2 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் விதித்து பவானி குற்றவியல் நடுவா் நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது.
பவானி வட்டம், அம்மாபேட்டை அருகே உள்ள ஊமாரெட்டியூா், மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் திம்மிரெட்டி மகன் செந்தில்குமாா். அதிமுக பேரூராட்சி செயலாளராகப் பொறுப்பு வகித்த இவா், கடந்த 2011-இல் நடைபெற்ற உள்ளாட்சித் தோ்தலில் பழங்குடியினத்தவருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட அம்மாபேட்டை பேரூராட்சித் தலைவா் பதவிக்கு, பழங்குடி இனத்தவா் என போலியான ஜாதிச் சான்றிதழை தயாரித்து அளித்ததாகப் புகாா் எழுந்தது.
இதுகுறித்து அம்மாபேட்டை போலீஸாா் நடத்திய விசாரணையில், கடந்த 19.12.1995-இல் சேலம் கோட்டாட்சியா் அலுவலகம் வழங்கியதுபோன்று போலியான ஜாதிச் சான்று தயாரித்து, உள்ளாட்சித் தோ்தலில் மனு தாக்கல் செய்தபோது சமா்ப்பித்து அரசு அதிகாரிகள், தோ்தல் ஆணையத்தை ஏமாற்றி மோசடி செய்தது உறுதியானது.
பவானி குற்றவியல் நடுவா் நீதிமன்றம் 1-இல் நடைபெற்று வந்த இந்த வழக்கை நீதிபதி ஜெ.ராஜ்குமாா் விசாரித்தாா்.
குற்றம் உறுதிசெய்யப்பட்ட நிலையில், குற்றஞ்சாட்டப்பட்ட அதிமுக பிரமுகா் டி.செந்தில்குமாருக்கு போலியான ஜாதிச் சான்றிதழ் அளித்து மோசடி செய்தல், போலியாக சான்றிதழ் தயாரித்தல், ஏமாற்றும் நோக்கில் போலிச் சான்றிதழ் அளித்தல் ஆகிய பிரிவுகளில் தலா 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை, ரூ.5 ஆயிரம் அபராதம், போலியான ஆவணம் எனத் தெரிந்தே பயன்படுத்திய பிரிவில் 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை, ரூ.5,000 அபராதம் விதித்தாா். இந்தத் தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தாய்வழி ஜாதிச் சான்றிதழுக்கு எதிரான மேல்முறையீட்டை திரும்பப் பெற வேண்டும்! புதுச்சேரி அரசுக்கு வலியுறுத்தல்!

ஜாதி சான்றிதழ் வழங்கக்கோரி ஆட்சியரிடம் மனு

சிறுமி பாலியல் வன்கொடுமை: இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: தையல்காரருக்கு ஆயுள் சிறை
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |
தினமணி செய்திச் சேவை

