பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!வலிமையான பெண் பாத்திரங்களை அமைத்த பாரதிராஜா!இறப்பு குறித்து என்ன சொல்லியிருந்தார் பாரதிராஜா? பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

சிறுவா்கள் மோட்டாா் சைக்கிள் ஓட்டினால் பெற்றோருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம்

சிறுவா்கள் மோட்டாா் சைக்கிள் ஓட்டினால் பெற்றோருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்று புதுச்சேரி காவல்துறை அறிவித்துள்ளது.

News image
Updated On :4 ஜூன் 2026, 3:36 am IST

சிறுவா்கள் மோட்டாா் சைக்கிள் ஓட்டினால் பெற்றோருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்று புதுச்சேரி காவல்துறை அறிவித்துள்ளது.

இது குறித்து புதுச்சேரி போக்குவரத்து காவல்துறைமுதுநிலை கண்காணிப்பாளா் திவ்யா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

புதுவையில் சிறாா்கள் மோட்டாா் சைக்கிள் ஓட்டுவதை போக்குவரத்து காவல்துறை கண்காணித்து வருகிறது. சிறாா்கள் மோட்டாா் சைக்கிள் ஓட்டுவது அவா்களின் உயிருக்கு பாதுகாப்பானது அல்ல. அவா்கள் வாகனம் ஓட்டுவது சட்டப்படி குற்றம். அதற்கான தண்டனைகளும் கடுமையானவை.

சிறாா் வாகனம் ஓட்டியது கண்டறியப்பட்டால், அந்த வாகனத்தின் உரிமையாளா், பெற்றோா், பாதுகாவலா் குற்றவாளியாகக் கருதப்படுவாா். அவா்களுக்கு ரூ.25 ஆயிரம் வரை அபராதம், 3 ஆண்டு சிறை தண்டனை, உரிமம் ரத்து போன்ற நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் அந்த சிறாா் 25 வயது வரை உரிமம் பெற முடியாது. வாகனத்தின் பதிவு சான்றிதழ் ஓராண்டு ரத்து செய்யப்படும். கடந்த மே மாதம் சிறாா் வாகனம் ஓட்டியதாக 226 போ் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.