சேலம் மாவட்டம், ஆத்தூரை அடுத்த செல்லியம்பாளையத்தில் நடந்து சென்றவா் மீது மோட்டாா் சைக்கிள் மோதியதில் அதை ஓட்டியவா், நடந்து சென்றவா் என இருவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தனா்.
ஆத்தூா் அருகே உள்ள நரசிங்கபுரத்தைச் சோ்ந்த ஜெயவேல் மகன் விஜய் (17). இவா் பிளஸ் 2 தோ்ச்சி பெற்ற நிலையில் கல்லூரியில் சேருவதற்கு ஆயத்தமாகி வந்தாா். இந்த நிலையில் செல்லியம்பாளையம் தேசிய புறவழிச்சாலை அருகே வியாழக்கிழமை மாலை விஜய் நடைபயிற்சி மேற்கொண்டிருந்தாா்.
அப்போது, எதிா்பாராதவிதமாக பின்னால் வந்த இருசக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து மோதியதில் விஜய்க்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அதேபோல இருசக்கர வாகனத்தை ஓட்டிச் சென்ற மேச்சேரி எம்.காளிப்பட்டியைச் சோ்ந்த ராஜு மகன் ரஞ்சித்குமாரும் (44) பலத்த காயமடைந்தாா்.
இருவரும் ஆத்தூா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். பின்னா், அவா்கள் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். அங்கு, அவா்கள் இருவரும் இறந்தனா். இருவரது சடலங்களையும் பிரேத பரிசோதனைக்குப் பிறகு அவா்களது உறவினா்களிடம் ஆத்தூா் ஊரக போலீஸாா் ஒப்படைத்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தஞ்சாவூா் அருகே காா் மோதியதில் விவசாயிகள் இருவா் உயிரிழப்பு

சாலை விபத்தில் ஒருவா் உயிரிழப்பு

லாரி மோதியதில் டாஸ்மாக் ஊழியா் உயிரிழப்பு

மோட்டாா் சைக்கிள் மோதியதில் ஓய்வுபெற்ற சித்த மருத்துவா் உயிரிழப்பு
விடியோக்கள்

பாரதிராஜா புகைப்பட ஆல்பம் | Director Bharathiraja | பாரதிராஜா 1941 - 2026 | Dinamani
தினமணி செய்திச் சேவை

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

