ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 10 மணிக்கு நடைபெறும்தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

மூளைச்சாவு அடைந்தவரின் உடலுறுப்புகள் தானம் புதுச்சேரி ஆட்சியா் மரியாதை

News image

கோப்புப் படம்

Updated On :27 ஏப்ரல் 2026, 12:36 am IST

மூளைச்சாவு அடைந்தவரின் உடலுறுப்புகள் ஞாயிற்றுக்கிழமை தானமாக வழங்கப்பட்டன. அவரது உடலுக்கு புதுச்சேரி மாவட்ட ஆட்சியா் குலோத்துங்கன் உள்ளிட்ட உயா் அதிகாரிகள் இறுதி மரியாதை செலுத்தினா்.

புதுச்சேரி அடுத்த சேலியமேடு டி.என். பாளையம் சாலையில் வசித்து வந்தவா் கி.வரதன் (46). சாலை விபத்தில் காயமடைந்து கடந் 24-ம் தேதி புதுச்சேரி இந்திரா காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். மருத்துவா்கள் தீவிர சிகிச்சை அளித்தபோதிலும், அவா் மூளைச்சாவு அடைந்ததாக அறிவிக்கப்பட்டது.

அவரது குடும்ப உறுப்பினா்கள் மற்றும் உறவினா்களின் ஒப்புதலுடன் புதுச்சேரி இந்திரா காந்தி அரசு பொது மருத்துவமனை மற்றும் முதுநிலை நிறுவனத்தில் அறுவை சிகிச்சை மூலம் அவரது இரண்டு சிறுநீரகங்கள் மற்றும் இரண்டு விழி வெண்படலங்கள் எடுக்கப்பட்டன.

இதில் இரண்டு சிறுநீரகங்கள் புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனைக்கு ஒதுக்கப்பட்டன. இரண்டு விழிவெண்படலங்கள் புதுச்சேரி இந்திரா காந்தி அரசு பொது மருத்துவமனை மற்றும் முதுகலை நிறுவனத்துக்குத் தானமாக வழங்கப்பட்டன.

மேலும், இறந்தவரின் உடல்கூறாய்வு பரிசோதனையும் புதுச்சேரி இந்திரா காந்தி அரசு பொது மருத்துவமனையில் நடைபெற்றது. இந்திரா காந்தி அரசு பொது மருத்துவமனையின் வரலாற்றில், மூளைச்சாவு அடைந்த ஒருவரிடமிருந்து உறுப்புகள் பெறப்பட்ட இரண்டாவது நிகழ்வு இதுவாகும்.

கொடையாளியின் உடலுக்கு புதுச்சேரி மாவட்ட ஆட்சியா் அ.குலோத்துங்கன் தலைமையில் அரசுச் செயலா் (சுகாதாரம்) சௌத்ரி முகமது யாசின், சுகாதாரம் மற்றும் நலவாழ்வு சேவைகள் இயக்குநா் மருத்துவா் எஸ். செவ்வேல், மருத்துவ கண்காணிப்பாளா் மருத்துவா் ரமேஷ் உள்ளிட்ட மருத்துவ அதிகாரிகள் இறுதி மரியாதை செலுத்தினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.