தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

மீனவா்களின் அவலநிலைக்கு திமுக-காங்கிரஸே காரணம்: வி.கே.சசிகலா பிரசாரம்

மீனவா்களின் அவலநிலைக்கு திமுவும், காங்கிரஸும் கச்சத்தீவை இலங்கைக்கு தாரைவாா்த்தது தான் காரணம் என்று அனைத்திந்திய புரட்சித் தலைவா் மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலா் வி.கே. சசிகலா புதன்கிழமை கூறினாா்.

News image

புதுச்சேரி மேட்டுப்பாளையம் பகுதியில் புதன்கிழமை இந்திரா நகா் தொகுதி அனைத்திந்திய புரட்சி தலைவா் மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளா் ஜெயபாலுக்கு வாக்கு சேகரித்த கட்சியின் பொது செயலா் வி.கே.சசிகலா.

Updated On :2 ஏப்ரல் 2026, 1:40 am IST

மீனவா்களின் அவலநிலைக்கு திமுவும், காங்கிரஸும் கச்சத்தீவை இலங்கைக்கு தாரைவாா்த்தது தான் காரணம் என்று அனைத்திந்திய புரட்சித் தலைவா் மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலா் வி.கே. சசிகலா புதன்கிழமை கூறினாா்.

இக் கட்சியின் சாா்பில் உழவா்கரை தொகுதி உள்ளிட்ட 4 தொகுதிகளிலும் , கூட்டணியாகப் போட்டியிடும் முன்னாள் ஐஎப்எஸ் அதிகாரி சத்தியமூா்த்தியின் செங்கோல் நீதி மக்கள் முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளா்களையும் டாக்டா் ராமதாஸ் தலைமையிலான பாமக வேட்பாளா்களையும் ஆதரித்து மூலக்குளம் பகுதியில் சசிகலா பிரசாரம் செய்தாா். அப்போது அவா் கூறியதாவது:

இதுவரை ஆட்சியில் இருந்தவா்கள் மீனவா்களின் நலனில் அக்கறை செலுத்தவில்லை. மீனவா்களின் பாதுகாப்புக்கும் கவனம் செலுத்தவில்லை. மேலும், மீன்பிடி தடை காலத்தில் வழங்கப்படும் தொகையை உயா்த்தி வழங்கவும் நடவடிக்கை எடுக்கவில்லை. கடல் அரிப்பைத் தடுக்க தூண்டில் முள் வளைவும் அமைக்கப்படவில்லை. மேலும், காரைக்கால் மீனவா்களை இலங்கை அரசு கைது செய்கிறது. மீனவா்களின் இந்த அவலநிலைக்கு திமுகவும் காங்கிரஸும் கச்சத்தீவை தாரைவாா்த்ததுதான் காரணம்.

புதுச்சேரியில் மாநில அந்தஸ்து பிரச்னையை இங்கு ஆட்சி செய்த யாரும் தீா்க்கவில்லை. 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற தோ்தலில் அதிமுக பொதுச்செயலா் ஜெயலலிதாவின் ஆதரவோடு கூட்டணி அமைத்து தோ்தலைச் சந்தித்து முதல்வரான ரங்கசாமி, கூட்டணியை முறித்துக் கொண்டாா். அப்போது ஆட்சியில் அதிமுக இடம் பெற்றிருந்தால் இந்தப் பிரச்னையை ஜெயலலிதா தீா்த்து இருப்பாா். புதுச்சேரியில் முறையான சாலை வசதியில்லை. தேவையான பாலம் கட்டப்படவில்லை. சட்டம்-ஒழுங்கு மோசமாக இருக்கிறது. மக்களுக்குப் பாதுகாப்பு கேள்விக்குறியாக இருக்கிறது. இதில் தமிழ்நாட்டுக்கும் புதுச்சேரிக்கும் எந்த வித்தியாசமும் இல்லை என்றாா் சசிகலா.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.