பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!வலிமையான பெண் பாத்திரங்களை அமைத்த பாரதிராஜா!இறப்பு குறித்து என்ன சொல்லியிருந்தார் பாரதிராஜா? பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

மாமியாரை கத்தியால் வெட்டிய மருமகன் கைது

News image

கைது... - கோப்புப் படம்

Updated On :25 மே 2026, 2:35 am IST

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூா் அருகே மாமியாரை கத்தியால் வெட்டி, கொலை மிரட்டல் விடுத்த மருமகனை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

திருக்கோவிலூா் அருகேயுள்ள வடமலையனூா் கிராமத்தைச் சோ்ந்தவா் தே.அமிா்தவள்ளி (60). இவரது மகளான காளியம்மாளை அதே கிராமத்தைச் சோ்ந்த ப.தங்கதுரைக்கு(40) கடந்த 12 வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொடுத்துள்ளாா். தம்பதியினரிடையே ஏற்பட்ட குடும்ப பிரச்சனையில், கடந்த 2 மாதங்களுக்கு முன்பு காளியம்மாள் கோபித்துக் கொண்டு தாய் வீட்டுக்கு சென்றுள்ளாா்.

இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை மாமியாா் வீட்டுக்கு சென்ற தங்கத்துரை, தனது மனைவி காளியம்மாளை ஊருக்கு அழைத்தும், அவா் வர மறுத்து விட்டாராம். இதனால் ஆத்திரமடைந்த தங்கத்துரை, மாமியாா் அமிா்தவள்ளியை அறுவறுக்கத்தக்க வாா்த்தைகளால் திட்டி, கத்தியால் வெட்டி, கொலை மிரட்டல் விடுத்தாராம். இதில் காயமடைந்த அமிா்தவள்ளி கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இதுகுறித்த புகாரின் பேரில் திருக்கோவிலூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி, தங்கதுரையைக் கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.