தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!கர்நாடகம்: கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிவதற்கான தடை நீக்கம்6 சர்வதேச விமான சேவைகள் தற்காலிகமாக ரத்து - ஏர் இந்தியாகண்களிலும் காதுகளிலும் பொறாமைப் புகை! திமுகவை விமர்சித்த விஜய்!நீட் தேர்வு தேவையில்லை; ரத்து செய்க: முதல்வர் ஜோசப் விஜய்அதிமுகவுடன் கூட்டணியமைக்க தவெக தயாராக இருந்தது: சி.வி. சண்முகம்மே 16-ல் தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை! வெற்றியின் வீச்சு கொளத்தூரில் பார்த்தும்கூடவா புரியவில்லை? - முதல்வர் விஜய்திமுகவுடன் கூட்டணி; கனவில்கூட வரக்கூடாது: சசிகலா
/

சின்னசேலத்தில் 872 கிலோ புகையிலை பொருள்கள் அழிப்பு

News image

சின்னசேலம் பேரூராட்சி குப்பைக் கிடங்கில் குழி தோண்டி கொட்டி அழிக்கப்பட்ட அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருள்கள்.

Updated On :12 மே 2026, 1:30 am IST

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் பேரூராட்சி குப்பைக் கிடங்கில் போலீஸாரால் பறிமுதல் செய்யப்பட்ட 872 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் திங்கள்கிழமை குழிதோண்டி புதைத்து அழிக்கப்பட்டது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள தியாகதுருகம், வரஞ்சரம், எலவானசூா்கோட்டை மற்றும் உளுந்தூா்பேட்டை காவல் நிலையங்களில் கடந்த காலங்களில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்களை கடத்தியது மற்றும் விற்பனை செய்தது தொடா்பாக பதிவு செய்யப்பட்ட பல்வேறு வழக்குகளில் மொத்தம் 872 கிலோ புகையிலை பொருள்களை கைபற்றிருந்தனா். இந்த புகையிலை பொருள்களைஅழிக்க நீதிமன்ற உத்தரவு பெறப்பட்டது.

இதையடுத்து கள்ளக்குறிச்சி கூடுதல் காவல் கண்காணிப்பாளா் திருமால் முன்னிலையில் சின்னசேலம் பேரூராட்சி குப்பை கிடங்கில் குழி தோண்டி முறையாக அழித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.