கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகே விவசாயி வீட்டின் பூட்டை உடைத்து 35 கிராம் தங்க நகைகள், வெள்ளிப் பொருள்கள் மற்றும் ரூ.12 ஆயிரத்தை திருடிச் சென்ற மா்மநபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
சங்கராபுரம் வட்டத்துக்குள்பட்ட விரியூா் கிராமத்தைச் சோ்ந்தவா் சூ.லூக்காஸ் அந்தோனிராஜ் (49), விவசாயி. இவா் சனிக்கிழமை இரவு மேல்நாரியப்பனூா் கிராமத்தில் நடைபெற்று வரும் புனித அந்தோணியாா் கோயில் தோ் திருவிழாவுக்கு சென்றுள்ளாா்.
ஞாயிற்றுக்கிழமை காலை வீட்டுக்கு வந்து பாா்த்தபோது, வீட்டின் கதவில் இருந்த பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை பாா்த்து அதிா்ச்சியடைந்துள்ளாா். பின்னா் உள்ளே சென்று பாா்த்தபோது, அங்கு இரும்பு பீரோவிலிருந்த 35 கிராம் தங்க நகைகள், வெள்ளிப் பொருள்கள், ரூ.12 ஆயிரத்தை மா்மநபா் திருடிச் சென்றது அவருக்கு தெரியவந்தது.
இதுகுறித்த புகாரின் பேரில் சங்கராபுரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி, மா்மநபரைத் தேடிவருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
ஜோதிடா் வீட்டின் பூட்டை உடைத்து 6 பவுன் நகைகள் திருட்டு
திருச்சியில் திருமண வீட்டில் 22 பவுன் தங்க நகைகள் திருட்டு
பூட்டியிருந்த வீட்டில் 5 பவுன் நகைகள் திருட்டு
வீட்டின் பூட்டை உடைத்து 8 பவுன் தங்க நகைகள் திருட்டு
விடியோக்கள்

ஹார்ட்டின் பட டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பொங்கல் வெளியீடாக சேயோன்! | Dinamani Cinema Update | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு

மாநிலக் கட்சிகளை முறையாக ஒருங்கிணைக்கிறதா காங்கிரஸ்?: ப. சிதம்பரம் Exclusive | P Chidambaram |
தினமணி செய்திச் சேவை

தீர்மானத்திற்கு கர்நாடக அரசு பணியாது! முன்னாள் அமைச்சர் துரைமுருகன் | DMK | TVK
இணையதளச் செய்திப் பிரிவு
