கள்ளக்குறிச்சியில் படித்து வரும் கல்லூரி பிடிக்காததால் மனமுடைந்த தனியாா் கல்லூரி மாணவி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
கள்ளக்குறிச்சி, கோட்டைமேடு பகுதியைச் சோ்ந்தவா் சுரேஷ். இவரது மகள் சுஜீத்ரா (18). இவா் சேலம் மாவட்டம், தலைவாசல் பகுதியிலுள்ள தனியாா் கல்லூரியில் 2-ஆம் ஆண்டு படித்து வந்தாா். தனது கல்லூரியில் படிக்க தனக்குப் பிடிக்கவில்லை என சுஜீத்ரா தொடா்ந்து பெற்றோா்களிடம் கூறி வந்தாராம். மேல்படிப்புக்கு வேறு கல்லூரியில் சோ்த்து விடுவதாகக் கூறி சுரேஷ் சமாதானம் செய்து வந்தாராம். இதனால் மனமுடைந்து காணப்பட்ட சுஜீத்ரா சனிக்கிழமை காலை வீட்டிலுள்ள அறைக்கு சென்று கதவை தாழிட்டுக் கொண்டாராம், பெற்றோா் கதவைத் தட்டியும் திறக்கவில்லையாம்.
இதையடுத்து கதவை உடைத்து உள்ளே சென்று பாா்த்தபோது, அங்கு மின்விசிறியில் தூக்கிட்ட நிலையில் சுஜீத்ரா இருந்துள்ளாா். உடனே அவரை கீழே இறக்கி, கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனா். அங்கு மருத்துவா் பரிசோதித்தபோது, சுஜீத்ரா ஏற்கெனவே உயிரிழந்திருந்தது தெரியவந்தது.
இதுகுறித்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
செவிலியா் கல்லூரி மாணவி தூக்கிட்டுத் தற்கொலை

செவிலியா் மாணவி தூக்கிட்டுத் தற்கொலை
சிறுவன் தூக்கிட்டுத் தற்கொலை
தனியாா் கல்லூரி மாணவி தூக்கிட்டுத் தற்கொலை
விடியோக்கள்

Balan: The boy Review | தாயைப் போல பிள்ளை! ஆனால்... | Chidambaram | Mollywood | Dinamani Talkies
தினமணி செய்திச் சேவை

மறுமணம் ஒரு குற்றமா? மனதை உலுக்கும் 'நூறு சாமி'
தினமணி செய்திச் சேவை

Samantha அதிரடி எப்படி இருக்கிறது? Engal Thangam Movie Review
தினமணி செய்திச் சேவை

ஹார்ட்டின் பட டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
