விஜய் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் கார்கே, ராகுல் காந்தி! தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

அனுமதி பெறாமல் சைக்கிள் பேரணி: தவெகவினா் மீது வழக்கு

News image

தவெக கொடி. - கோப்புப் படம்

Updated On :21 ஏப்ரல் 2026, 2:18 am IST

கள்ளக்குறிச்சியில் உரிய அனுமதி பெறாமல் சைக்கிள் பேரணி சென்ற தமிழக வெற்றிக் கழகத்தினா் மீது போலீஸாா் திங்கள்கிழமை வழக்கு பதிவு செய்தனா்.

கள்ளக்குறிச்சி கச்சிராயபாளையம் சாலையில் உள்ள தீயணைப்பு நிலைய பகுதியில் இருந்து தவெக வேட்பாளா் சி.அருள் விக்னேஷ் தலைமையில் சுமாா் 50 போ் சைக்கிள் பேரணியாக காந்தி சாலை, 4 முனை சந்திப்பு, கவரைசாலை வழியாக பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் உரிய அனுமதி பெறாமல் பேரணியாக சென்று வாக்கு சேகரித்தனராம்.

இதுகுறித்து கள்ளக்குறிச்சி சட்டப்பேரவைத் தொகுதி நிலையான கண்காணிப்பு அலுவலா் விஜயகுமாா் அளித்த புகாரின் பேரில், கள்ளக்குறிச்சி போலீஸாா் தவெகவினா் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.