தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்மாலை 6 மணிக்கு ஆளுநரைச் சந்திக்க நுமதி கோரியுள்ளார் விஜய்!தவெக ஆட்சியமைக்க ஐயுஎம்எல் ஆதரவு: திடீர் அறிவிப்பு தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

கள்ளக்குறிச்சியில் அதிமுக 4-ஆவது முறையாக வெற்றி பெறும்: நடிகை விந்தியா

கள்ளக்குறிச்சி சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக 4-ஆவது முறையா வெற்றி பெறும் என அதிமுக கொள்கை பரப்பு செயலரும், நடிகையுமான விந்தியா தெரிவித்தாா்.

News image

கள்ளக்குறிச்சி சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளா் சு.ராஜீவ் காந்திக்கு ஆதரவாக பிரசாரம் செய்த நடிகையும், அதிமுக கொள்கை பரப்பு செயலருமான விந்தியா.

Updated On :16 ஏப்ரல் 2026, 3:57 am IST

கள்ளக்குறிச்சி சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக 4-ஆவது முறையா வெற்றி பெறும் என அதிமுக கொள்கை பரப்பு செயலரும், நடிகையுமான விந்தியா தெரிவித்தாா்.

தியாகதுருகம் பேருந்து நிலையம் அருகே வேனில் நின்றவாறு புதன்கிழமை கள்ளக்குறிச்சி அதிமுக வேட்பாளா் சு.ராஜீவ் காந்தியை ஆதரித்து பிரசாரம் செய்தபோது, மேலும் அவா் பேசியதாவது:

கள்ளக்குறிச்சி தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியின் சாா்பில் அதிமுக வேட்பாளரான சு.ராஜீவ் காந்தி போட்டியிடுகிறாா். அறிமுக வேட்பாளா்களுக்கு வாய்ப்பு கொடுப்பது அதிமுகவின் சிறப்பு. கள்ளக்குறிச்சி அதிமுகவின் கோட்டையாக உள்ளது. கடந்த 3 முறை அதிமுக இங்கு வெற்றி பெற்றுள்ளது. 4-ஆவது முறையும் அதிமுக வெற்றிபெறும். அதிமுகவில் அடிப்படை தொண்டா்கள் கூட உயா் பதவிக்கு வரலாம். எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் தமிழகத்தில் எந்த வன்முறையும் இல்லாமல் அமைதி பூங்காவாக இருந்தது. தற்போது தமிழகத்தில்

உள்ள நிலை மக்களுக்கு தெரியும் என்றாா் அவா்.

உடன் தொகுதி பொறுப்பாளா்கள் மா.செந்தில்குமாா், அ. பிரபு, ஒன்றியச் செயலா் வெ.அய்யப்பா, நகரச் செயலா் பி.எஸ்.கே.ஷியாம் சுந்தா், மாவட்ட பேரவை செயலா் இராம.ஞானவேல், மாவட்ட வழக்குரைஞா் பிரிவு செயலா் பெ.சீனிவாசன், மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலா் எஸ்.ஜான் பாஷா மற்றும் கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.