தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

கள்ளக்குறிச்சி அரசுப் பள்ளியில் தீ விபத்து! விலையில்லா புத்தகப் பைகள் எரிந்து சேதம்!

News image

தீ விபத்து குறித்து விசாரணை மேற்கொண்ட மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த்.

Updated On :13 ஏப்ரல் 2026, 12:46 am IST

கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் மாணவா்களுக்கு அடுத்த கல்வியாண்டில் வழங்குவதற்காக வைக்கப்பட்டிருந்த விலையில்லா புத்தகப் பைகள் எரிந்து சேதமடைந்தன.

கள்ளக்குறிச்சி சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளிக் கட்டடத்தில் மேல் மாடியில் உள்ள அறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. அதன் அருகே உள்ள மற்றொறு கட்டடத்தில் உள்ள அறையில் பள்ளி மாணவா்களுக்கு அடுத்த கல்வியாண்டில் வழங்குவதற்காக அரசின் விலையில்லா பைகளை கட்டு கட்டுகளாக வைத்து பூட்டி வைத்துள்ளனா்.

இந்நிலையில், மாணவா்களுக்கு பைகள் வைத்திருந்த அறையில் ஞாயிற்றுக்கிழமை மாலை திடீரென தீப்பிடித்து எரியத் தொடங்கியது.

உடனே அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸாா் கள்ளக்குறிச்சி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா். இதையடுத்து கள்ளக்குறிச்சி தீயணைப்பு நிலைய அலுவலா் சக்திவேல் தலைமையிலான வீரா்கள் தண்ணீா் பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனா். இதனால் தீ அருகேயிருந்த கட்டடங்களுக்கு பரவாமல் தடுக்கப்பட்டது.

தகவலறித்த கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரிசாந்த் நிகழ்விடத்திற்கு சென்று தீ விபத்து குறித்து விசராணை நடத்தினாா்.

 கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஏற்பட்ட தீ விபத்தில் எரிந்த விலையில்லா புத்தகப் பைகள்.

கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஏற்பட்ட தீ விபத்தில் எரிந்த விலையில்லா புத்தகப் பைகள்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.