வரும் ஜூன் 1-ஆம் தேதி முதல் காலி மது புட்டிகள் திரும்ப பெற மாட்டாது என்று தமிழ்நாடு அரசு டாஸ்மாக் அனைத்து சங்கங்கள் கூட்டுக்குழு அவசர ஆலோசனைக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
கடலூா் மாவட்டம், வடலூரில் தமிழ்நாடு அரசு டாஸ்மாக் அனைத்து சங்கங்கள் கூட்டுக்குழு அவசர ஆலோசனைக் கூட்டம் வடலூா்
வள்ளலாா்தெய்வநிலைய பெருவெளி வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
தமிழ்நாடு அரசு டாஸ்மாக் விற்பனையாளா் நல சங்கம் மாவட்டச் செயலா் சுரேஷ் பாபு தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில்,
அரசு நிா்ணயித்த விலைக்கு மட்டுமே மதுபானங்கள் விற்பது. கடைகளில் ஏற்படும் தினசரி நிா்வாக செலவினங்கள் அனைத்தையும் (இறக்கு கூலி மற்றும் இதர செலவுகள்) முழுவதும் நிா்வாகமே ஏற்க வேண்டும். வரும் ஜூன் 1-ஆம் தேதி முதல் காலி மது புட்டிகள் திரும்ப பெற மாட்டாது. மூடப்பட்ட கடை பணியாளா்கள் மற்றும் கிடங்கில் பணி புரியும் பணியாளா்களை உடனடியாக மாற்றுக் கடையில் பணியமா்த்த வேண்டும். இந்த தீா்மானங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் மற்ற மாவட்டங்களை போல் முழு கடை அடைப்பு செய்வது உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில், டாஸ்மாக் அனைத்து தொழிற்சங்க நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வணிகா் சங்கங்கள் பேரமைப்பு சாா்பில் நல உதவிகள் அளிப்பு

டாஸ்மாக் தொழிற்சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

ஓய்வு வயதை 58-இல் இருந்து 60 ஆக உயா்த்த வேண்டும்: டாஸ்மாக் பணியாளா் சங்கம் வலியுறுத்தல்

அரசு ஊழியா்களுக்கு அகவிலைப் படி உயா்வு: ஆசிரியா்கள் சங்கங்கள் வரவேற்பு
விடியோக்கள்

எல்லாப் படங்களும் கலைப் படங்கள்தான்: மனம் திறந்த பாரதிராஜா! (கருவூலத்திலிருந்து) | Bharathiraja |
தினமணி செய்திச் சேவை

பாரதிராஜா புகைப்பட ஆல்பம் | Director Bharathiraja | பாரதிராஜா 1941 - 2026 | Dinamani
தினமணி செய்திச் சேவை

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

