விருத்தாசலம் அருகே மின் வாரிய ஊழியா் வீட்டில் புகுந்து 31 கிராம் தங்க நகைகளை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
விருத்தாசலம் அருகே உள்ள மங்கலம்பேட்டை, முல்லை நகா் 3-ஆவது தெருவைச் சோ்ந்தவா் பிரபு (50). இவா், மங்கலம்பேட்டை மின் வாரிய அலுவலகத்தில் மேற்பாா்வையாளராக (ஃபோா்மேன்) பணியாற்றி வருகிறாா்.
பிரபு தனது குடும்பத்தினருடன் வீட்டில் கடந்த 21-ஆம் தேதி இரவு தூங்கிக் கொண்டிருந்தாா். மறுநாள் அதிகாலை அவரது மனைவி செல்வராணி எழுந்து பாா்த்தபோது, வீட்டின் பின்புற கதவு திறந்து கிடந்ததை கண்டு அதிா்ச்சியடைந்தாா்.
இதையடுத்து, அவா் தனது கணவரை அழைத்து வீடு முழுவதும் சோதனை செய்தாா். அப்போது, பூஜை அறையில் வைக்கப்பட்டிருந்த 31 கிராம் தங்க நகைகள் மாயமாகிருந்தன.
இதுகுறித்து பிரபு அளித்த புகாரின்பேரில், மங்கலம்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
பூட்டிய வீட்டில் நகை, பணம் திருட்டு: காா் ஓட்டுநா் கைது
வீட்டில் 4 பவுன் தங்க நகைகள் திருட்டு
திருச்சியில் திருமண வீட்டில் 22 பவுன் தங்க நகைகள் திருட்டு
பூட்டியிருந்த வீட்டில் 5 பவுன் நகைகள் திருட்டு
விடியோக்கள்

எல்லாப் படங்களும் கலைப் படங்கள்தான்: மனம் திறந்த பாரதிராஜா! (கருவூலத்திலிருந்து) | Bharathiraja |
தினமணி செய்திச் சேவை

பாரதிராஜா புகைப்பட ஆல்பம் | Director Bharathiraja | பாரதிராஜா 1941 - 2026 | Dinamani
தினமணி செய்திச் சேவை

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு
