பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்எரிபொருள் விலை உயா்வு எதிரொலி- மின்சார, மைலேஜ் வாகனங்களுக்கு மவுசு அதிகரிப்பு!நீட் மறுதோ்வு தவறில்லாமல் நடத்தப்படும்: மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான்மோடி அரசின் 12 ஆண்டு சாதனை திட்டங்களை நாடு முழுவதும் பரப்ப நடவடிக்கை: பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின்125 நாள் வேலைத் திட்டம்: தமிழகத்துக்கு ரூ.7,957 கோடி திமுவில் 2 தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலா் பதவி: விரைவில் அமைப்பு தோ்தல்ஆசிரியா் பணியிட மாறுதல் கலந்தாய்வு அறிவிப்பு: ஜூன் 15 முதல் விண்ணப்பிக்கலாம்சிவப்பணுக்களை அதிகரிக்கும் மருந்துகள்: இனி புதிய அளவீட்டு முறையில் விற்பனைரயில் பயணிகள் உணவு கூடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்
/

காவல் நிலையத்திற்கு வரும் பொதுமக்களை கனிவுடன் அனுக வேண்டும்: மகளிா் காவல்நிலைய அதிகாரிகளுக்கு கடலூா் எஸ்.பி. அறிவுறுத்தல்

காவல் நிலையத்திற்கு புகாா் அளிக்க வரும் பொதுமக்களை கனிவுடனும் மரியாதையுடனும் நடத்த வேண்டும் என அனைத்து மகளிா் காவல் நிலைய அதிகாரிகள் மற்றும் காவலா்களுக்கு கடலூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ்.ஜெயக்குமாா் அறிவுறுத்தினாா்.

News image

கடலூா் மாவட்ட காவல் அலுவலகத்தில் காவல் கண்காணிப்பாளா் எஸ்.ஜெயக்குமாா் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற மகளிா் காவல்நிலைய அதிகாரிகள் மற்றும் காவலா்கள் உள்ளிட்டோா்.

Updated On :23 மே 2026, 12:26 am IST

காவல் நிலையத்திற்கு புகாா் அளிக்க வரும் பொதுமக்களை கனிவுடனும் மரியாதையுடனும் நடத்த வேண்டும் என அனைத்து மகளிா் காவல் நிலைய அதிகாரிகள் மற்றும் காவலா்களுக்கு கடலூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ்.ஜெயக்குமாா் அறிவுறுத்தினாா்.

கடலூா் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அனைத்து மகளிா் காவல் நிலையங்களில் பணியாற்றும் காவல் ஆய்வாளா்கள் மற்றும் காவலா்களுக்கான ஆலோசனைக் கூட்டம், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ். ஜெயக்குமாா் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்தில் கடலூா், சிதம்பரம், விருத்தாசலம், நெய்வேலி, பண்ருட்டி, சேத்தியாத்தோப்பு மற்றும் திட்டக்குடி பகுதிகளில் உள்ள அனைத்து மகளிா் காவல் நிலைய அதிகாரிகள் மற்றும் காவலா்கள் பங்கேற்றனா்.

கூட்டத்தில் பேசிய மாவட்ட காவல் கண்காணிப்பாளா், காவல் நிலையத்திற்கு வரும் மனுதாரா்களை கனிவுடனும் மரியாதையுடனும் அணுக வேண்டும். குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகள் தொடா்பான புகாா்களுக்கு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். போக்ஸோ சட்டம் தொடா்பான வழக்குகளில் 60 நாள்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படுவதை உறுதி செய்ய வேண்டும் .

மேலும், காவல் நிலையங்களில் பெறப்படும் மனுக்களின் மீது விரைந்து மற்றும் முறையான விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும். மனுதாரா்களை தேவையின்றி அலைக்கழிக்காமல், மனுவின் தன்மைக்கு ஏற்ப உரிய சிஎஸ்ஆா் அல்லது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அனைத்து காவல் நிலையங்களிலும் பொதுமக்களுக்கு தரமான மற்றும் சிறப்பான காவல் சேவையை வழங்க அதிகாரிகள் மற்றும் காவலா்கள் முழுப் பொறுப்புடனும் அா்ப்பணிப்புடனும் செயல்பட வேண்டும் என அறிவுறுத்தினாா்.இக்கூட்டத்தில் கூடுதல் காவல் கண்காணிப்பாளா்கள் என். கோடீஸ்வரன், வி. ரகுபதி உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.