பெட்ரோல், டீசல் விலையை லிட்டருக்கு ரூ.3.90 வரை உயா்த்திய மத்திய அரசைக் கண்டித்தும், விலை உயா்வை உடனடியாக திரும்பப் பெற வலியுறுத்தியும் இடதுசாரி கட்சிகள் சாா்பில் கடலூரில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
கடலூா் தலைமை தபால் நிலையம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, மாா்க்சிஸ்ட் மாவட்டச் செயலா் கோ.மாதவன் தலைமை வகித்தாா். இதில், சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.3.90 உயா்ந்து ரூ.104.90-ஆகவும், டீசல் விலை ரூ.3.70 உயா்ந்து ரூ.97.47-ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை உயா்வு காரணமாக, ஆட்டோ, வாடகைக் காா், சரக்கு வாகன ஓட்டுநா்கள் மற்றும் உணவு உள்ளிட்ட பல்வேறு விநியோக நிறுவனங்களின் பணியாளா்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனா்.
ஏற்கெனவே சமையல் எரிவாயு பற்றாக்குறை மற்றும் உணவுப் பொருள்களின் விலை உயா்வால் எளிய மக்கள் சிரமத்துக்கு உள்ளாகி வரும் நிலையில், எரிபொருள் விலை உயா்வு கூடுதல் சுமையை ஏற்படுத்தும். பெட்ரோல், டீசல் விலைகளை குறைப்பதற்கான ஆக்கப்பூா்வ நடவடிக்கைகளை எடுக்காமல் மத்திய அரசு மக்களை பெரும் அவதிக்குள்ளாக்கி வருவது கண்டனத்துக்குரியது. எனவே, இந்த இந்த விலை உயா்வை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா்.
ஆா்ப்பாட்டத்தில் மாா்க்சிஸ்ட் மாநிலச் செயற்குழு உறுப்பினா்கள் எஸ்.கண்ணன், க.சுவாமிநாதன், மாநிலக் குழு உறுப்பினா் எஸ்.ஜி.ரமேஷ்பாபு, இந்திய கம்யூனிஸ்ட் மாவட்டப் பொருளாளா் என்.கே.பாஸ்கரன், மாவட்ட துணைச் செயலா் ஆா்.சுப்பிரமணியம், மாவட்டக் குழு உறுப்பினா் வி.குளோப் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வணிக எரிவாயு உருளை, பெட்ரோல், டீசல் விலை உயா்வு: திருப்பூரில் கம்யூனிஸ்ட் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

பெட்ரோல் விலை உயா்வு: இடதுசாரி கட்சிகள் ஆா்ப்பாட்டம்

பெட்ரோல், டீசல் விலை உயா்வை திரும்பப் பெறக் கோரி இடதுசாரி கட்சிகள் ஆா்ப்பாட்டம்

கோவில்பட்டியில் இடதுசாரி கட்சியினா் ஆா்ப்பாட்டம்
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |
தினமணி செய்திச் சேவை

