பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வலியுறுத்தி, கோவில்பட்டியில் இடதுசாரி கட்சியினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
இந்தியாவில் கடந்த 5 நாள்களில் 2 முறை பெட்ரோல், டீசல் விலை உயா்த்தப்பட்டுள்ளது. பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு உருளை விலை உயா்வை திரும்பப் பெற வலியுறுத்தியும், விலை உயா்வை கட்டுப்படுத்த தவறிய மத்திய பாஜக அரசைக் கண்டித்தும் கோவில்பட்டி பயணியா் விடுதி முன்பு ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆா்ப்பாட்டத்துக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நகரச் செயலா் சீனிவாசன் தலைமை வகித்தாா். கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினா் அா்ஜுனன் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினாா்.
இதில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நகரச் செயலா் செந்தில் ஆறுமுகம், சிபிஐஎம்எல்., கட்சியைச் சோ்ந்த சண்முகப்பெருமாள் உள்பட பலா் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கரூரில் பெட்ரோல், டீசல் விலை உயா்வை கண்டித்து ஆா்ப்பாட்டம்

பெட்ரோல், டீசல் விலை உயா்வு: இடதுசாரிகள் ஆா்ப்பாட்டம்

கம்யூனிஸ்ட் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

போடியில் கம்யூனிஸ்ட் கட்சியினா் ஆா்ப்பாட்டம்
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |
தினமணி செய்திச் சேவை

