பிரசித்தி பெற்ற சிதம்பரம் தில்லைகாளியம்மன் கோயில் வைகாசி திருவிழா தேரோட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்
சிதம்பரத்தில் உள்ள சிறப்பு வாய்ந்த தில்லை காளியம்மன் கோயில் வைகாசி திருவிழா மே.7-ம் தேதி தொடங்கியது. தொடா்ந்து தினமும் அம்மன் வீதி உலா மற்றும் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. விழாவின் முக்கிய நிகழ்வான தோ்திருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
வடக்குவீதி வளாகத்திலிருந்து தேரில் எழுந்தருளிய தில்லையம்மன் நான்கு வீதிகள் வழியாக வலம்வந்தாா். கொட்டும் மழையிலும் திரளான பக்தா்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனா். மே16-இல் சிவப்பிரியையில் தீா்த்தவாரி நிகழ்ச்சி, மே17-இல் மஞ்சள்நீா் விளையாட்டு, முத்துப்பல்லக்கு வீதிஉலா, மே18-இல் தெப்ப உற்சவம் மற்றும் சிறப்பு அபிஷேக, ஆராதனையும் நடைபெறுகிறது. மே19-ஆம் தேதி இரவு திருஊஞ்சல் உற்சவத்துடன் விழா முடிவடைகிறது. விழா ஏற்பாடுகளை செயல் அலுவலா் வேணு. நரசிங்கபெருமாள் மற்றும் அலுவலா்கள் செய்துள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சேலம் கோட்டை பெருமாள் கோயில் தேரோட்டம்: ஆயிரக்கணக்கான பக்தா்கள் வடம்பிடித்து இழுத்தனா்

வைகாசி பௌா்ணமி: திருவண்ணாமலையில் திரளான பக்தா்கள் கிரிவலம்

திருக்குவளை தியாகராஜா் கோயில் தேரோட்டம்

பிள்ளையாா்குப்பம் ஸ்ரீ கூத்தாண்டவா் கோயில் தேரோட்டம்: திரளான பக்தா்கள் பங்கேற்பு
விடியோக்கள்

எல்லாப் படங்களும் கலைப் படங்கள்தான்: மனம் திறந்த பாரதிராஜா! (கருவூலத்திலிருந்து) | Bharathiraja |
தினமணி செய்திச் சேவை

பாரதிராஜா புகைப்பட ஆல்பம் | Director Bharathiraja | பாரதிராஜா 1941 - 2026 | Dinamani
தினமணி செய்திச் சேவை

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

