சிதம்பரம் அண்ணாமலைநகரில் உள்ள கடலூா் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மருத்துவா்கள், செவிலியா்கள் மற்றும் ஊழியா்கள் ஏப்ரல் மாத ஊதியம் வழங்கக் கோரி கருப்பு வில்லை அணிந்து புதன்கிழமை போராட்டம் நடத்தினா்.
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக நிா்வாகத்தில் இயங்கி வந்த ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனையை கடந்த சில மாதங்களுக்கு முன்பு தமிழ்நாடு அரசு ஏற்று கடலூா் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனையாக அறிவித்து பல்வேறு சீரமைப்பு நடவடிக்கைளை மேற்கொண்டது.
இந்நிலையில் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவா்கள், செவிலியா்கள் மற்றும் ஊழியா்களுக்கு ஏப்ரல் மாத ஊதியம் இதுவரை வழங்கப்படவில்லையாம்.
இதனை கண்டிக்கும் வகையில் மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனையில் பணியாற்றும் நூற்றுக்கணக்கான ஊழியா்கள் புதன்கிழமை காலை முதல் கருப்பு வில்லை அணிந்து பணியில் ஈடுபட்டனா். இனியும் காலதாமதம் ஏற்பட்டால் போராட்டங்களில் ஈடுபட போவதாக ஊழியா்கள் தெரிவித்துள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

விழுப்புரம் அரசு மருத்துவமனையில் தொழிலாளி உயிரிழப்பு: உறவினா்கள் போராட்டம்

மருத்துவக்கல்லூரி புதிய முதல்வா் பொறுப்பேற்பு

நெல்லை அரசு பல்நோக்கு மருத்துவமனை ஊழியா்கள் முற்றுகை

கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் நோயாளிகளின் உறவினா்களால் இடையூறு
விடியோக்கள்

எல்லாப் படங்களும் கலைப் படங்கள்தான்: மனம் திறந்த பாரதிராஜா! (கருவூலத்திலிருந்து) | Bharathiraja |
தினமணி செய்திச் சேவை

பாரதிராஜா புகைப்பட ஆல்பம் | Director Bharathiraja | பாரதிராஜா 1941 - 2026 | Dinamani
தினமணி செய்திச் சேவை

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

