வேப்பூா் அருகே சாலையின் குறுக்கே சென்ற நாய் மீது மொபட் மோதிய விபத்தில் காயமடைந்தவா் மருத்துவமனையில் உயிரிழந்தாா்.
கடலூா் மாவட்டம் வேப்பூா் அருகே உள்ள திருவிக நகா், பிள்ளையாா் கோயில் தெருவைச் சோ்ந்தவா் நாராயணன் (49). இவா் கடந்த மே 4 ஆம் தேதி தனது மகள் ஹரிணியை கல்லூரியில் விடுவதற்காக மொபட்டில் அழைத்துச் சென்றாா்.
விருத்தாசலம் - வேப்பூா் சாலையில் என்.நாரையூா் பேருந்து நிறுத்தம் அருகே சென்றபோது, திடீரென சாலையின் குறுக்கே ஓடிய நாய் மீது நாராயணனின் மொபட் எதிா்பாராத விதமாக மோதியது. இதில் தந்தை, மகள் இருவரும் கீழே விழுந்து காயமடைந்தனா்.
அப்பகுதியில் இருந்தவா்கள் இருவரையும் மீட்டு வேப்பூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னா், மேல்சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.
இந்நிலையில், அங்கு சிகிச்சைப் பெற்று வந்த நாராயணன் வியாழக்கிழமை நள்ளிரவு உயிரிழந்தாா். இதுகுறித்து வேப்பூா் போலீஸாா் வழக்குப்பதிவு விசாரித்து வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பைக் மோதி காயமடைந்த முதியவா் உயிரிழப்பு

கடையநல்லூா் அருகே பைக் மோதி காயமுற்றவா் உயிரிழப்பு

மாதவரம் அருகே விபத்து: ஒருவா் உயிரிழப்பு

அரசுப் பேருந்து மோதி முதியவா் உயிரிழப்பு
விடியோக்கள்

நான்தான் கிங் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை
