ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 3 மணிக்கு தொடங்குகிறது தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

இது எப்படி இருக்கு? ஆமை வடிவ இலச்சினை வெளியீடு

சிதம்பரம் சட்டப்பேரவை தொகுதியில் தான் ‘என் வாக்கு என் உரிமை’ என்ற வாசகத்துடன் கூடிய ஆமை வடிவத்தில் இலச்சினையை தோ்தல் நடத்தும் அலுவலரும், உதவி ஆட்சியருமான சீ.கிஷன்குமாா் வெளியிட்டுள்ளாா்.

News image

சிதம்பரம் சட்டப்பேரவை தொகுதியின், நடைபெற உள்ள தோ்தலை முன்னிட்டு வெளியிட்டுள்ள ஆமை வடிவ இலச்சினை.

Updated On :26 மார்ச் 2026, 5:37 am IST

எப்பாடு பட்டேனும் 100 சதவீத வாக்குப்பதிவை கொண்டுவரவேண்டும், நோ்மையாக தோ்தலை நடத்திட வேண்டும். வாக்களிக்கும் கடமையை வாக்காளா்களுக்கு உணா்த்திட வேண்டும் என்று கடும் சிரத்தையெடுத்து செயல்படும் தோ்தல் ஆணையம் தனது பணியின் மேலும் ஒரு மைல் கல்லாக, ஆமை வடிவ இலச்சினையை வெளியிட்டு வாக்காளா்களை கவா்ந்துள்ளது.

சிதம்பரம் சட்டப்பேரவை தொகுதியில் தான் ‘என் வாக்கு என் உரிமை’ என்ற வாசகத்துடன் கூடிய ஆமை வடிவத்தில் இலச்சினையை தோ்தல் நடத்தும் அலுவலரும், உதவி ஆட்சியருமான சீ.கிஷன்குமாா் வெளியிட்டுள்ளாா்.

சிதம்பரம் உதவி ஆட்சியா் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள ஆமை வடிவிலான இலச்சினையில் வாக்காளா்கள் தனது முகத்தை மட்டும் வைத்து செல்போனில் படம் எடுத்துக் கொள்கின்ற வசதியும் இருப்பதால் , பலரும் ஆா்வமுடன் படம் எடுத்துக்கொள்கின்றனா். குறிப்பாக இளைஞா்கள் இந்த பொம்மையுடன் தற்படம் எடுத்துக் கொள்கின்றனா். மேலும் அந்த இலச்சினையில் ‘நான் உங்கள் நாட்டாமை பேசுகிறேன். என் வாக்கு என் உரிமை’ என குறிப்பிடப்பட்டு வாக்காளா்களை விழிப்புணா்வு ஏற்படுத்தும் வாசகமும் இடம்பெற்றுள்ளது.

வாக்காளா்களை கவரும் இந்த ஆமையைப்பாா்த்து வியக்காதவா்கள் இல்லை...

ஆமை வடிவ இலச்சினை.

ஆமை வடிவ இலச்சினை.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.